திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -31
*******************************************************************
{thanks for vijaykumar A…… sir }
#மனிதனுக்கு #நல்லொழுக்கத்தை #விஞ்ஞான #ரீதியாக #போதிக்க #இதை #விட #யாராலும் #முடியுமா? #நமது #தெய்வ #சித்தர் #திருமூலரால் #மட்டுமே #முடியும்:
———————————————————————————
மனிதன் எவ்வாறு ஒழுக்க நிலையை அடைவது? எவ்வாறு சீர்படுவது? எவ்வாறு இறைவனை அடைவது? இது போன்ற கேள்விகள் ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாக எழும். இதற்கான விடை மிகவும் பெரியது என்று எண்ணி களைத்துப் போவர். ஆனால் இதற்கான விடையை எவ்வளவு எளிதாக சதாசிவனின் 5 முகங்களை கொண்டு திருமூலர் விளக்குகிரார் பாருங்கள் மக்களே!
“நடுவு, கிழக்குதெற்குத்தரம், மேற்கு
நடுவு படிகம் நற்குங்கும வன்னம்
அடைவுஉள அஞ்சனம், செவ்வரத்தம், பால்
அடியாற்கு அருளிய முகம்இவை அஞ்சே” (தி.ம 1735)
பொருள்:
————-
சதாசிவனின் ஐந்து முகங்களும் ஐந்து நிறமாகும். ஈசானம் – படிக நிறம், தத்புருடம் – மஞ்சள் குங்குமம் நிறம், அகோரம் – கருப்பு நிறம், வாமதேவம் – சிவப்பு நிறம், சத்தியோசாதம் – பால் நிறம். இந்த ஐந்து முகங்களும் எனக்கு அருள் செய்தன.
செய்யுளின் உட்கருத்து:
———————————-
இந்த தத்துவத்தை வாமதேவ முகத்தில் இருந்து தொடங்க வேண்டும். வாமதேவ முகம் சந்தான விருத்திக்கு ஏதுவாகிய காமவேட்கையாகும். இதன் காரணமாக எழுவது அன்பின் முகமான அகோர முகம். அன்பு பாராட்ட தெரியாத மனிதருக்கு காம முகம் வக்கிரமானதாக அமையும். அன்பின் காரணமாக எழுவது உண்மையறியும் ஞான வேட்கையை தூண்டும் சத்தியோசாதம் முகம் ஆகும். காமவேட்கையால் உண்மையெது பொய் எது என்று அறியாமல் இருக்கும் நிலையில் உண்மையை கண்டெடுத்து ஆன்மாவை தூய்மைபடுத்துவதே தத்புருட முகம் ஆகும். தூய்மைபடுத்தபட்ட ஆன்மா இறைவனை அடைவது ஈசான முகம் ஆகும்.
நிறங்களும் விஞ்ஞானம்:
————————————-
ஈசானம் என்பது கபாலத்திற்கு மேல் உள்ளதாக கருதப்படும் அது பளிங்கு நிறம், வாம தேவம் என்பது காம வேட்கையை தூண்டும் இரத்த அணுக்கள் சார்ந்தது அது சிவப்பு நிறம் ஆகும். அகோர முகம் என்பது அன்பு என்னும் உணர்வின் வெளிப்பாடு அது அறிவியலை பொருத்த வரையில் கருப்பு நிறம். சத்தியோசாத ஞானம் சார்ந்த மூளையின் செயல்பாடு, அது பாலை ஒத்த நிறமாகும். தத்புருடம் ஆஞ்ஞை சமபந்தப்பட்டது அங்குதான் பிட்யூட்டரி சுரபி உள்ளதால் அது மஞ்சலும் குங்குமமும் சேர்ந்த கலவையை ஒத்த நிறம்.
——————————————————————————–
ஆக எவன் ஒருவன் காமத்தை கடந்து அன்பு வழியில் பொய்யான மாயை எது உண்மை எது என்று உணர்ந்து செயல்படுகிறானோ அவனே ஈசனை அடைவான் என்பது திருமூலர் கருத்தாகும்…..