​திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -31

​திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -31

*******************************************************************
{thanks for vijaykumar A…… sir }
#மனிதனுக்கு #நல்லொழுக்கத்தை #விஞ்ஞான #ரீதியாக #போதிக்க #இதை #விட #யாராலும் #முடியுமா? #நமது #தெய்வ #சித்தர் #திருமூலரால் #மட்டுமே #முடியும்:

———————————————————————————
மனிதன் எவ்வாறு ஒழுக்க நிலையை அடைவது? எவ்வாறு சீர்படுவது? எவ்வாறு இறைவனை அடைவது? இது போன்ற கேள்விகள் ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாக எழும். இதற்கான விடை மிகவும் பெரியது என்று எண்ணி களைத்துப் போவர். ஆனால் இதற்கான விடையை எவ்வளவு எளிதாக சதாசிவனின் 5 முகங்களை கொண்டு திருமூலர் விளக்குகிரார் பாருங்கள் மக்களே!
“நடுவு, கிழக்குதெற்குத்தரம், மேற்கு

நடுவு படிகம் நற்குங்கும வன்னம்

அடைவுஉள அஞ்சனம், செவ்வரத்தம், பால்

அடியாற்கு அருளிய முகம்இவை அஞ்சே” (தி.ம 1735)
பொருள்:

————-

சதாசிவனின் ஐந்து முகங்களும் ஐந்து நிறமாகும். ஈசானம் – படிக நிறம், தத்புருடம் – மஞ்சள் குங்குமம் நிறம், அகோரம் – கருப்பு நிறம், வாமதேவம் – சிவப்பு நிறம், சத்தியோசாதம் – பால் நிறம். இந்த ஐந்து முகங்களும் எனக்கு அருள் செய்தன.
செய்யுளின் உட்கருத்து:

———————————-

இந்த தத்துவத்தை வாமதேவ முகத்தில் இருந்து தொடங்க வேண்டும். வாமதேவ முகம் சந்தான விருத்திக்கு ஏதுவாகிய காமவேட்கையாகும். இதன் காரணமாக எழுவது அன்பின் முகமான அகோர முகம். அன்பு பாராட்ட தெரியாத மனிதருக்கு காம முகம் வக்கிரமானதாக அமையும். அன்பின் காரணமாக எழுவது உண்மையறியும் ஞான வேட்கையை தூண்டும் சத்தியோசாதம் முகம் ஆகும். காமவேட்கையால் உண்மையெது பொய் எது என்று அறியாமல் இருக்கும் நிலையில் உண்மையை கண்டெடுத்து ஆன்மாவை தூய்மைபடுத்துவதே தத்புருட முகம் ஆகும். தூய்மைபடுத்தபட்ட ஆன்மா இறைவனை அடைவது ஈசான முகம் ஆகும்.
நிறங்களும் விஞ்ஞானம்:

————————————-

ஈசானம் என்பது கபாலத்திற்கு மேல் உள்ளதாக கருதப்படும் அது பளிங்கு நிறம், வாம தேவம் என்பது காம வேட்கையை தூண்டும் இரத்த அணுக்கள் சார்ந்தது அது சிவப்பு நிறம் ஆகும். அகோர முகம் என்பது அன்பு என்னும் உணர்வின் வெளிப்பாடு அது அறிவியலை பொருத்த வரையில் கருப்பு நிறம். சத்தியோசாத ஞானம் சார்ந்த மூளையின் செயல்பாடு, அது பாலை ஒத்த நிறமாகும். தத்புருடம் ஆஞ்ஞை சமபந்தப்பட்டது அங்குதான் பிட்யூட்டரி சுரபி உள்ளதால் அது மஞ்சலும் குங்குமமும் சேர்ந்த கலவையை ஒத்த நிறம்.

——————————————————————————–

ஆக எவன் ஒருவன் காமத்தை கடந்து அன்பு வழியில் பொய்யான மாயை எது உண்மை எது என்று உணர்ந்து செயல்படுகிறானோ அவனே ஈசனை அடைவான் என்பது திருமூலர் கருத்தாகும்…..

​திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -57

​திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -57

*******************************************************************
{thanks for vijaykumar A…… sir }
இரத்தமே நோயை கண்டறியவும் (Blood Test), நோயை போக்குவதற்கு பிரதானம் என்பதை கண்டறிந்த நமது சித்தர்கள்:

——————————————————————————-

நமது உடலின் பெரும்பான்மை நீரால் ஆனது. அதில் இரத்தம்தான் அதிக பங்கு வகிக்கிறது. உடலுக்குள் அனைத்து உருப்புகளுக்கும் பிராணனை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுபோல நோய் கிருமிகளும் இரத்தத்தின் வாயிலாகவே பயணிக்கிறது. அதனால்தான் இன்றைய மருத்துவர்கள் நோயை கண்டறிய இரத்த பரிசோதனை நடத்தி நோயை இரத்தத்தில் இருந்து அகற்ற மருந்தளிக்கின்றனர். ஆனால் இந்த யுகியின் தந்தை நமது சித்தர்கள்தான் என்று சொன்னால் மிகை அல்ல:
“உண்ணப்பா மண்டலந்தான் நோயும் போகும்

உதிரத்தில் உத்தமனே நோயும் போகும்.” (நந்தீசர் சகல கலி ஞானம்- பா. 926)
பொருள்:

————

ஒரு மண்டலத்திற்கு அதாவது 48 நாளைக்கு இரத்த சுத்திகரிப்பு மருந்தை உட்கொண்டால் இரத்தத்தில் உள்ள நோய் யாவும் பறந்து போகும் என்பது சித்தர் வாக்கு.
இங்கு இரத்தத்தை சுத்திகரிப்பதற்கான வழியையும் திருமூலர் மகான் கூறுகிறார்:
“அஞ்சு யுகத்தில் அழியாமல் காயந்தான்

மிஞ்சிய கற்பம் விளம்பினோம் நூற்றெட்டுத்

தஞ்ச முறவே தாந்தின்ன வல்லோர்க்கு

பஞ்சு நரைபோய்ப் பதிந்தோங்கி வாழ்வரே” (திம 732)
பொருள்:

————-

உடலை அழியாமல் பேணிகாக்க காயகற்பமே சிறந்த மருந்தாகும். அது உடலை வலிமை படுத்தி கல் போல உறுதியாக்கும். காயகற்பம் உட்கொள்ளுபவர் நோய் நொடியின்ரி நீண்ட காலம் வாழளாம் என்பது திருமூலர் வாக்கு.
அறிவியல்:

—————–

இன்றைய மருத்துவ உலகில் இரத்த பரிசோதனை இல்லாத எந்த சிகிச்சையும் இல்லை. இன்றைய மருத்துவ உலகில் உள்ள அனைத்து மருந்துகளும் இரத்தில் கலப்பதாகவே உள்ளது. அனைத்து மருந்துகளிலும் காயகற்ப மூலக்கூறு உண்டு. இதை நாம்தான் அறிவதில்லை.

———————————————————————————

நம் முன்னோர்கள் வகுத்த பாடத்தை வெள்ளைகாரன் கெட்டியா புடிச்சுகிட்டு என்னவோ எல்லாத்தையும் தாந்தான் கண்டுபிடிச்சதா மார்தட்டிக் கொண்டிருக்கிறான். அனைத்திற்கும் ஆஸ்தானம் நாம் தான் என்று உணர்வது எப்போது?

​திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -54

​திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -54

*******************************************************************
{thanks for vijaykumar A…… sir }
#திருமூலர் #அறிந்து #சொன்ன #பெறு #மூளை (Cerebrum (Parietal Lobe)) #மற்றும் #சிறு #மூளை (Cerebellum):

——————————————————————————–
மனித மூளையானது இரண்டாக பிரிந்துதான் செயல்படுகிறது. ஒன்று சிறு மூளை (பேரறிவு). மற்றொன்று பெறு மூளை (சிற்றறிவு). இதில் பெறு மூளையானது மனிதனின் ஐம்புலன்களின் உணர்வுகளை வைத்திருக்கும். சிறு மூளையானது ஐம்புலன்கள் மற்றும் மனிதனி அநேக செயல்பாட்டுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
“அறிவு ஐம்புலனுடனே நான்றது ஆகி

நெறிஅறி யாதுஉற்ற நீராழி போல 

அறிவு அறிவுள்ளே அழிந்தது போலக்

குறிஅறி விப்பான் குருபரன் ஆமே” (திம 119)
பொருள்:

————-

மனிதனின் அறிவானது சிற்றறிவான ஐம்புலன்களின் நாட்டம் கொண்டு வெள்ளத்தில் அகபட்டு வழி தெரியாமல் செல்வது போல கெட்டழியும். ஒரு சிறப்பான குரு உபதேசம் மூலம் கெட்டழியும் உயிர் பேறறிவின் (மனம், சித்தம்) (மூளையின் இந்த பகுதியில்தான் மனிதனின் மனம், பழக்கவழக்கங்கள் தீர்மானிக்கப்படுகிறது) மூலம் நல்வழிப்படும்.
அறிவியல்:

—————-

பெரு மூளையானது மடிப்புகளுடன், மேடு பள்ளங்கள் நிறைந்து காணப்படும். இப்பகுதியில் உடலின் பல பாகங்களில் இருந்து ஐம்புலன்கள் உணர்ச்சியும், சீதோஷ்ணமும் பற்றிய செய்திகள் பதிவாகின்றன. பெரு மூளையின் மற்றொரு பகுதியில் கேட்டல், சுவைத்தல், நுகர்தல் போன்ற உணர்ச்சிகள் பற்றிய செய்திகள் பெறப்படுகின்றன.‌‌சிறு மூளை‌தா‌ன் ம‌னித‌னி‌ன் குண‌ம், பழ‌க்க வழ‌க்க‌ங்களு‌க்கு காரணமாக அமை‌கிறது.

http://tamil.webdunia.com/article/home-remedies/மனிதனின்-மூளை-109082700067_1.htm

http://www.brainandspine.org.uk/anatomy-brain

———————————————————————————

மனிதனின் மூளையை குறித்து இவ்வளவு நுண்மையான அறிவாற்றல் கொண்டிருந்ததால்தான் என்னவோ நம் முன்னோர்களால் இவ்வளவு அறிவு சார்ந்த விசயங்களை மிக எளிமையாக சொல்ல முடிந்தது.

​திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -6

​திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -6

*******************************************************************
{thanks for vijaykumar A…… sir }
#உயிரின் #நிறம் #என்ன? அறிவியல்

சிந்தனையோடு விளக்குகிறார்கள்

திருமூலரும், மாணிக்கவாசகரும்:

———————————————

———————————–

முந்தைய பதிவில் உயிர் சென்று அமரும் இடம்

குறித்து அறிந்தோம். உயிர் அமரும் இடம் பற்றி

சொன்ன சித்தர்கள் அதன் நிறம் குறித்து

சொல்லாமல் இருப்பார்களா?
உயிர் 1008 இதழ்த் தாமரை மலரில்

வீற்றிருப்பதாக சித்தர்கள் கூறுகிறார்கள்.
“மேவி எழுகின்ற செஞ்சுடர்

ஊடுசென்று” (தி.ம 1777)
“ஜோதியே! சுடரே! சூழ் ஒளிவிளக்கே!”

(மாணிக்கவாசகர்)
“ஊனறிந்துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்” (தி.ம

1797)
இவ்வாறு அணுவுக்கு அணுவாக நீல நிற

ஒளிவட்டமாக விளங்கும் சக்தியின் பீடத்தின்

நடுவில் தீபச் சுடராக சிவம் விளங்குகின்றது

எனவும் அந்தத் தீப வடிவே உயிரின் வடு

எனக் கூறப்படுகிறது.
அறிவியல் கூறும் 1008 என்ன?

———————————————

மனித மூளை 1008 பகுதிகள் கொண்டது

அவைகளில் நரம்பு மண்டலம், திறனாய்வு,

அசைவு, சிந்தித்தல், இரத்த நாளங்கள் என்று

1008 பிரிவுகள் உள்ளது. இந்த 1008

பகுதிகளும் சீராக இயங்கினால்தான் ஒரு

மனிதனால் நோயின்றி உயிர்வாழ் முடியும்.

———————————————

————————————-

இப்போது புரிகிறதா மக்களே!!!!!! நாம் நமது

இறைவனையும் இறைவியையும் 1008

பெயர்களை கொண்டு அழைக்கிறோம் என்று?
ஆகவே கண்ணதாசன் சொன்னதுபோல்

அர்த்தமுள்ள இந்து மதம் என்பதில்

ஐயமில்லை.

​திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -69

​திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -69

*******************************************************************
{thanks for vijaykumar A…… sir }
“#ஓம்” #என்ற #பிரணவ #மந்திரத்தால் #குணமான #இதய #நோயாளி. #சப்த #அதிர்வுகளால் #தண்டுவடத்தில் #இருக்கும் #நரம்புகளை #தூண்ட #முடியும் #என்ற #அறிவியலை #விளக்கும் #திருமூலர்:

————————————————————————————-

சப்த அதிர்வலைகளால் செய்ய முடியாத விந்தை என்று இந்த உலகத்தில் ஏதும் இல்லை. திருமூலரின் அண்டமே பிண்டம் பிண்டமே அண்டம் என்ற கோட்பாட்டின் படி அண்ட வெளியில் நிகழ்ந்த பெறு வெடிப்பானாலும் சரி, சூரியனின் ஒலியானாலும் சரி, அனைத்தும் குறிப்பது “ஓம்” என்னும் பிரணவத்தைதான். அண்டத்தை பாதிக்கும் எந்த ஒரு நிகழ்வும் அண்டத்தில் வாழும் உயிர்களையும் பாதிக்கும் என்பது ஆன்மீகம் மட்டுமல்ல அறிவியலின் விதியும் கூட:
“மகாரம் நடுவே; வளைந்திடும் சக்தியை

ஓகாரம் வளைத்திட்டும் பிளந்து ஏற்றி,

அகாரம் தலையாய் இருகண் சிகாரமாய்

நகார வகாரம்நற் காலது நாடுமே” (திருமந்திரம்: 921)
பொருள்:

————-

கொப்புழுக்கு கீழ் சுருண்டிருக்கும் குண்டலினி சக்தியை மேலே இருக்கும் புருவத்தை நோக்கி பாயச் செய்யும் ஓகாரம், அகரம் என்கின்ற சிவம் அறிவு மயமாய் விளங்கும் இடம் தலையாகவும், அதன் அனல் சக்தியை கண்கள் மூலமாக விளங்கலாம். சுவாத்திட்டானத்திலுள்ள ஆபாணனை சீராக இயக்கும் நாதத்தை அசுழுமுனையில் இருந்து விருப்புடன் தொடங்குக.
அறிவியல்:

—————–

பிரபல மருத்துவர் Dr. தீபக் சோப்ரா M.D அவர்களது கருத்து யாதெனில். மனிதனின் ஒவ்வொரு சப்தத்திற்கும் ஒரு அதிர்வு உண்டு அந்த சப்தம் மனிதனி ஒவ்வொரு உருப்பையும் பாதிக்கும். உதாரணமாக ஓங்காரச் சொல்லின் முதல் எழுத்தான “அஅஅஅஅஅஅஅ” என்று உச்சரிக்கும் போது அடிவயிற்றில் அதிர்வுகள் உண்டாகும். அடுத்த எழுத்தான “உஉஉஉஉஉஉஉ” என்று உச்சரிக்கும் போது நெஞ்சுப்பகுதியில் அதிர்வுகள் ஏற்படும். அடுத்த எழுத்தான “மமமமமமம” என்று உச்சரிக்கும்போது தொண்டையிலும் மூளையிலும் அதிவுகள் ஏற்படும். இந்த அதிர்வுகள் மனிதனின் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும். கவனத்தை கூட்டும். இந்த அதிர்வுகள் மூலம் பல நோய்களை குணப்படுத்தலாம்.

இதய நோயில் இருந்து குணம் பெற்ற அயல் நாட்டுப் பெண்

————————————————————————————–

திருமதி க்லௌடிய ஜெப்ஃ என்ற 54 வயது இதய நோயாளி தொடர்ச்சியான பிரணவ தியானத்தால் இரத்த அழுத்தம் சீராகி இதய நோயில் இருந்து குணமடைந்து தற்போது எந்த வித மருந்துமின்றி நோயற்ற வாழ்வை வாழ்ந்து வருவதாக வாக்குமூலமே கொடுத்துள்ளார்.

————————————————————————————–

இதுதான் நமது முன்னோர்களின் மாண்பு. இது என்றைக்கு நமது நாட்டு மக்களுக்கு புரியப் போகிறதோ?

​திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -22

​திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -22

*******************************************************************
{thanks for vijaykumar A…… sir }
#கண்ணில் #துடிக்கு #நாடி (Veins of Eyes) #அறிந்து #சொன்ன #திருமூலர். #நாமும் #அறிந்து #கொள்வோமா?????

———————————————————————————
நம் முன்னோர்கள் அறியா விசயங்கள் என்று இந்த புவியில் ஏதேனும் உண்டா என்ன? நாம் கண் மருத்துவமனைக்கு சென்றால் அங்குள்ள மருத்துவர்கள் என்ன செய்வார்கள். ஒரு எந்திரத்தின் முன் அமர வைத்து அந்த எந்திரத்தில் உள்ள லென்ஸ் வாயிலாக நமது கண்ணை உற்று கண்கானிப்பர். அப்படி என்னதான் பார்க்கிறார்கள். நமது கண்ணில் மொத்தம் 4000 நாடிகள் உள்ளன. எல்லாம் சரிவர இயங்குகிறதா என்று பார்ப்பதற்கு துடிப்பு இருக்கிறதா என்று காணுதல் அவசியம். அதை பரிசோதிக்கவே லென்ஸ் வாயிலாக கண்ணை பரிசோதிக்கின்றனர். இதைத்தான் திருமூலர் அன்றைக்கே….
“நாடியி னோசை நயன மிருதயம்

தூடி யளவுஞ் சுடர்விட்டு சோதியைத்

தேவரு ளீசன் றிருமால் பிரமனும்

ஓவற நின்றிங் குணர்ந்திருந் தாரே” (தி.ம 657)
பொருள்:

————-

கண்கள் இதயம் என்பனவற்றில் நாடியின் ஓசை விளங்குகிறது.ஒவ்வொரு சிறு துடியும் ஒலியை உண்டாக்குகிறது. அந்த ஒலியை உணந்து அகக் கண் நோக்கி தியானத்தின் வாயிலாக கண்டோமேயானால் அங்கே பெரும் ஜோதியாக விளங்கும் சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மூவரையும் காணலாம்.
குறிப்பு:

———–

கண் பார்வையில் கோளாறு ஏற்பட கூர்மன் என்ற வாயுவின் குறைபாடே காரணம் என்பது சித்தர் வாக்கு இதைத்தான் திருமூலர் “கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால்” (தி.ம 656) என்று பாடியிருப்பார்.

——————————————————————————–

இவ்வளவு தொழில்நுட்ப உபகரனங்கள் கொண்ட இக்காலத்தில் இந்த துடிப்பையெல்லாம் ஆராய்வது சுலபமே…. ஆனால் அக்காலகட்டத்தில் இந்த துடிப்பை கண்கானித்து மருத்துவமும் அளித்துள்ளனர் என்பதை காணும் போது வியப்பத்தின் உச்சத்தை அடைய நேரிடுகிறது…..

​திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -33

​திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -33

*******************************************************************
{thanks for vijaykumar A…… sir }
’#கனவு’ (Dream) #எப்படி #வருகிறது? #விஞ்ஞான #ரீதியாக #விவரிக்கிறார் #திருமூலர்:

——————————————————————————–
மனிதன் தூக்கத்திலும் சில சமையங்களில் விழித்துக் கொண்டிருக்கும் போது கனவு காண்கிறார். அந்த கனவில் பல்வேறு உருவங்களையும் நிகழ்வுகளையும் காண்கிறான். அது மனிதனின் மூளையில் ஏற்படும் மாயத் தோற்றங்கள். இதை திருமூலர் கீழ்கண்ட பாடல் மூலமாக அற்புதமாக விவரிக்கிறார்.
“நனவு ஆதி தூலமே சூக்கப் பகுதி;

அனதான வைஐந்தும் விந்துவின் சத்தி;

தனதுஆம் உயர்விந்து தான் நின்று போந்து

கனவா நனவில் கலந்தது இவ்வாறே” (தி.ம 2187)
பொருள்:

————

மனிதனின் 25 தத்துவங்கள் நுண்னிய இலைக் கோடுகளாய் தோன்றி மூளையின் மேல் அடுக்கில் ஒளி மண்டலாமாய் தோன்றும். இந்த நிகழ்விற்கு பெயர்தான் கனவு என்பதாம். அந்த ஒளிமண்டலமானது நனவு போல் தோன்றும்.
தெளிவான விளக்கம்:

——————————–

புருவ நடுவில் பெருமூளை உள்ள இடமே சாக்கிர நிலை அதாவது நிஜத்தில் நடப்பவையை அறியும் நிலை. பின் மூளையில் உள்ள இடம் பிடரிக்கண் அதாவது மாயை தோற்றங்களை உருவாக்கவல்லது. இவை இரண்டும் தொடர்பு கொள்ளும் போது (பெரு மூளையும், பின் மூளையும்) தலையின் மேல் பகுதியில் ஒளி மண்டலம் தோன்றும். அவ்வாறு தோன்றும் போது இவ்வுலகில் நாம் இருந்தும் இல்லாத நிலைப் போல் தோன்றும். நிஜத்தையும் மாயையும் கலந்த தோற்றத்தின் நிகழ்வுகள் ஏற்படும் இந்த நிலையைத்தான் கனவு என்கிறார்கள்.
நவீன விஞ்ஞானிகள் கூற்றை அறிய விரும்புவோர்:

—————————————————————————–

http://www.sciencefocus.com/qa/which-part-brain-generates-dreams

——————————————————————————-

மூளயை பர்ரி இன்றளவும் பல ஆராய்ச்சிகள் நடந்து வரும் நிலையில் மூளையை இவ்வளவு நுட்பமாக அறிந்து வைத்திருக்கும் திருமூலரை வியக்காமல் இருக்க முடியுமா?
{உயிரினங்களின் நின்று விந்துவோ நாதமோ வெளியேறும் போது மூலையில் நமது எண்ண அலைகளுக்கு தேவையான பிரணவ ஒளி குறையும்.. எப்போதும் எண்ண ஆற்றலில் இயக்கதை தடையில்லாது நடத்திக் கொண்டு இருக்கும் மூலைக்கு ஞான ஒளி குறைப்பாட்டால் இருளில் (மாயை) யோசனை வெளிப்படும்..

கனவுக் கொள்ளும் போது ஆத்ம சக்தி குறையும் அல்லது ஆத்ம சக்தி குறையும் போது கனவு உண்டாகும்…}

​திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -11

​திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -11

*******************************************************************
{thanks for vijaykumar A…… sir }
#நமது #உடலில் #உயிர் #எங்கே #இருக்கிறது (#அமர்கிறது) #விளக்கும் #திருமூலரின் #திருமந்திரம்:

——————————————————————————-
நமது உடலில் உயிர் ஓடிக் கொடிருப்பதால்தான் நாம் செயல்பட முடிகிறது என்பது இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை. இதே திருமந்திரத்தில் ஒரு தாயின் தொப்புல்கொடியில் இருந்துதான் கரு என்னும் பிண்டத்திற்கு மெல்லிய சத்ததுடன் உயிர் சென்று கருவுக்கு உயிரூட்டுகிறது என்பதை பதிவிட்டிருந்தேன். ஆனால் அவ்வாறு சென்ற உயிர் உடலில் எந்த பாகத்தில் போய் அமர்கிறது என்ற சந்தேகம் மேலோங்கும். அந்த சந்தேகத்தை திருமூலரே தீர்த்து வைக்கிறார்.
“உச்சிக்கு கீழே உண்ணாக்கு மேலே

வச்ச பொருளின் வகையறிவாரில்லை”

“உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே” (தி.ம 309)
பொருள்:

————-

உயிர் சென்று அமரும் இடம் தலை உச்சிக்கு கிழே உழ்நாக்கிற்கு மேலே. தாயின் தொப்புள் கொடியில் இருந்து வரும் உயிர் நமது உச்சிக்கு கீழே வந்தமருகிறது.
விஞ்ஞானம்:

——————-

இன்றைய விஞ்ஞானத்தின் படி பார்த்தாலும் நமது நரம்பு மண்டலத்தின் முடிச்சி இந்த இடத்தில்தான் அமைந்துள்ளது. நமது முதுகு தண்டுவடம் (Spinal card) இந்த இடத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது.

———————————————————————————-

உயிர் அமரும் இடமட்டுமல்லாமல் அதன் வடிவத்தையும் நிறத்தையும் பற்றிக் கூட நமது திருமூலர் சித்தர் கூறியிருக்கிறார். அதை பின் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

​திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -56

​திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -56

*******************************************************************
{thanks for vijaykumar A…… sir }
#கருவில் #உள்ள #சிசுவிற்கு #நினைவுகள் #உண்டா? #கேள்விக்கு #பதிலளிக்கிறார் #திருமூலர்:

——————————————————————————
திரும்முலரை போல குழந்தை பேறு மருத்துவத்தை அறிந்து சிறந்தவர் இவ்வுலகில் இல்லை என்றே கூறலாம். சிசு தாயில் கருவரையில் ஆரம்ப நிலையில் துயிலுடனே உதிக்கும். பின்பு படிப்படியாக வளர்ச்சி பெரும். பின்பு சிசுவானது தாயின் கருவறையில் இருக்கும் போதே நினைவாற்றலையும் பெறுகிறது.
“கர்பத்துக் கேவலம் மாயாள் கிளை கூட்ட

நிற்கும் துரியமும் பேதித்து நினைவு எழ

வற்புறு காமியம் எட்டு ஆதல் மாயேயம்

சொற்பு உறு தூய்மறை வாக்கின்ஆம் சொல்லே” (திம 460)
பொருள்:

————

தாயானவள் கருவில் அறியாத நிலைமையில் உள்ள சிசுவிற்கு மாயை தத்துவங்களை சேர்ப்பாள். அவ்வாறு சேர்க்கப்பட்டதும் சிசுவானது தூக்கத்தில் இருந்து விடுபட்டு நினைவு பெறும். அந்த சிசுவில் நினைவில் 8 வகை குணங்களும் 4 வகை எண்ணங்களும் அடங்கும்.
8 வகை குணங்கள்: தர்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதர்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அநைசுவரியம்.
4 வகை எண்ணங்கள்: சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகிரி.
அறிவியல்:

—————–

சிசுவானது தனது 5ஆவது மாதத்தில் நினைவு பெறுகிறது. இந்த காலகட்டத்தில்தான் தாய் நல்ல விசயங்களை செய்வதும், கேட்பதும், தர்மத்தின் வழி நடப்பதும் அவசியமாகிறது. இந்த காலகட்டத்தில் தாயானவள் எவ்வாறு நடந்து கொள்கிறாலோ அவ்வாரே சிசுவின் எண்ணோட்டங்களும் அமையும்.

———————————————————————————

ஆகவே கர்பினிகளே கருவை சுமக்கும் காலகட்டத்தில் நல்ல இசையை கேளுங்கள், நல்ல எண்னோட்டத்துடன் செயல்படுங்கள் உங்களுக்கு சான்றோன் மகனாகவோ மகளாகவோ பிறப்பார்கள். இது திருமூலரின் வாக்கு.

​திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -30

​திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் -30

*******************************************************************
{thanks for vijaykumar A…… sir }
#பஞ்சபூதங்களின் #கோட்பாடுகள் #நமது #உடலுக்குள் #உள்ள 5 #மாத்திரைகளின் #கோட்பாடுகளோடு #பொருந்தும். #இதை #நாம் #உணர்ந்து #செயல்பட்டால் #பிணி #நம்மை #அண்டாது. #கற்பிக்கிறார் #திருமூலர்:

———————————————————————————
பஞ்சபூதங்களுக்கு என்று கோட்பாடுகள் உண்டு. பஞ்ச பூதங்களிலேயே ஒன்று இன்னொன்றுக்கு அடக்கம் அதாவது நீரானது நிலத்திற்குள் அடங்கிவிடும், தீயானது நீருக்குள் அடங்கிவிடும், காற்றானது வானத்தில் ஒடுங்கிவிடும்.
“உலந்திலர், பின்னும் உளர்’ என நிற்பர்

நிலம் தரு நீர், தெளி ய்ய்னவை செய்யப்

புலம் தரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக 

வலம்தரு தேவரை வந்தி செய்யீரே” (தி.ம 1727)
பொருள்:

————- 

ஒன்று கூடும் முறையில் நிலம் நீரிலும், நீர் தீயிலும், தீ காற்றிலும், காற்று வானத்திலும் ஒடுங்கி தூய்மை பெற, அப்படியே பூதங்களுக்குக் காரணமான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற 5 தன்மாத்திரைகளும் ஒடுங்கும் படி வல்லமையை அருளும் சிவ பெருமானை வணங்குங்கள்.

——————————————————————————-

இதைத்தான் திருமூலர் அண்டத்தில் பிண்டம் அடக்கம் பிண்டத்தில் அண்டம் அடக்கம் என்று கூறுவார்.