​கடவுள் மனிதன் – முக்தி

​கடவுள் மனிதன் –  முக்தி

****************************
( சாகாபாதை  தோற்றங்கழும கண்களும் 25 தத்துவங்களும்) 
(பகுதி1)

*********
thanks for Raja Krishna Moorthy sir….
 கடவுள் தத்துவம் உருவானது ஏன்?
..கடவுள் யார் அல்லது எது ? பிரபஞ்சம் எப்படி உருவானது? 
கடவுள் ஏன் பிரபஞ்சத்தை உருவாக்கினார் ?மனிதன்யார் ? 
கடவுள் மனிதன முக்தி

இம்மூன்றின் தொடர்பு என்ன ?

முக்தி என்று உண்டா ?முக்தி என்றால் என்ன ? முக்தியின் குறிக்கோள் .என்ன ? முக்தியில் பல நிலைகள் உள்ளாதா ? முக்தி அடையும் வழி எது ? இந்த அடிப்படை கேள்விகளுக்கு விடைகாணமுயன்றேன்..
முக்திபற்றி சித்தர்களிடம் நான் கேட்டேன் . அதற்கு அவர்கள் சொன்னதை சொல்கிறேன்

முக்தி பற்றி அறிவதற்கு முன் கடவுள் பற்றியும் , மனிதன் பற்றியும் அறியவேண்டும்
.1 கடவுள் கொள்கை .

**********************
கடவுள் உண்டது என்பார் உண்டு . இல்லை என்பாரும் உண்டு .
1.1 கடவுள் தத்துவம் உருவானது ஏன்?

பார்க்கும் அழகில் இன்பம் . கேட்கும் இசையில் இன்பம். நுகரும் நறுமணத்தில் இன்பம் . உண்பவற்றில் சுவையில் இன்பம் உடல் தொடுகையில் இன்பம் . இவை புலன் இன்பம் .ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட புலனுணர்வு சேர்ந்து தருவதில் அதிக இன்பம் பெறுகிறோம் ..
இவை ஐந்தும் சேர்ந்து தரும் பெண் இன்பம் அல்லது ஆணின்பம் உச்சமானது .
இதை திருவள்ளுவர்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐயம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள .

திருக்குறள் 1101 .என்றார்
புற தூண்டலால் கிடைக்கும், ஐந்தும் சேர்ந்த இன்பத்தில் கிடைக்கும் உணர்வு என்பது சுக அனுபவம் . நாம் பெற்ற இந்த சுக அனுபவம், மனத்தால் நினைத்தாலே கிடைத்துவிடுகிறது . ஆனால் இது நிலைத்து நிற்பது இல்லை. எனவே சக்தி இருக்கும் வரை மீண்டும் மீண்டும் இந்த புற தூண்டலை தேடுகிறோம் .
 மிருகங்களும் இதை செய்கின்றன . 

இதுவே உயிர்கள் நிலைத்து இருக்க ஆதாரம் . இதை காம சுகம் அல்லது சிற்றின்பம் என்றனர் சித்தர்கள் இதுவே மனிதயினம் பெருகவும் நிலைத்து இருக்கவும் ஆதாரம் .. .
ஐந்து புலன்களால் இன்பம?் பெறுவது போல் துன்பமும் உயிர்கள் பெறுகின்றன . உயிர்கள் அடையும் துன்பத்தில் பெரும் துன்பம் மரணம் .. உயிர்கள் அனைத்தும் மரணம் உள்பட துன்பத்தை தவிர்த்து இன்பத்தை தேடுகின்றன … ஆனால் இயற்க்கை சீற்ற துன்பம் , பிற உயிரினங்கள் கொடுத்த இன்னல் , சக மனிதர்கள் உண்டாக்கிய துன்பங்கள் ஆகியவற்றை மனித சக்தியால் .தடுக்க முடியவில்லை .
இதன் காரணத்தை அறிய முற்பட்டான் மனிதன் அதற்க்கு முதற்படியாக இயற்கையை ஆராய்ந்தான் . மரணத்திற்கு முன்னும் மரணித்தபின்னும் நடப்பது பற்றி அறிய முற்பட்டான். .
அப்பொழுது அவன் அறிந்தது.,புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட நிலைகள் உண்டு .

அதை புலன்களால் மட்டுமே அறிய முடியாது .. மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு இயக்க சக்தி என்று ஒன்று உள்ளது என்று உணர்ந்தான் . மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்திக்கு கடவுள் என்று பெயரிட்டான்

..அந்த சக்தி மனிதனை துன்பத்தில் இருந்து காப்பாற்றும் என்று நம்பினான் . மேலும் அதை வணங்கினால் அவனுக்கு துன்பம் நீக்கி இன்பம் தரும் என்று நம்பினான் .. இந்த நம்பிக்கை இன்றுவரை உள்ளது . மரண பயமும் துன்பங்களும், இன்பம் பெறவேண்டும் என்ற ஆசையும் கடவுள் தத்துவத்தை உருவாக்கியவை .. . பயமும் ஆசையும் கடவுள் என்ற தத்துவம் உருவாக காரணம் .
1..2 கடவுள் யார்?
கடவள் பற்றி அடிப்படை உண்மைகள்

மனிதன் தனது விஞ்ஞானமய கோசத்தால் துன்பம் தவிர்த்து நீடித்த நிலையான இன்பம் மட்டும் பெற வழி முறைகள் தேடினான் .. . அப்பொழுது அவன் கண்ட தீர்வு கடவுள் .
இப்பிரபஞ்சம . தோன்றுவதற்குமுன் எது அல்லது யார் இருந்தாரோ அவர் கடவுள் .
எங்கெல்லாம் மனித சக்தி செயல் படுத்த முடியாமல் . இயக்கங்கள் சுயமாக நடை பெறுகிறதோ அங்கு செயல்படுகிற சக்தி இறை சக்தி. .. அல்லது இயற்கை சக்தி அல்லது கடவுள் என்று முடிவு செய்தான் .
கடவுள் சக்தி நேரடியாக செயல் படாமல் பிரபஞ்சம் மூலம் செயல்படுகிறது என்று உணர்ந்தான் .
இப்பிரபஞ்சம இன்பமும் தரும் துன்பமும் தரும் . இன்ப துன்பங்களுக்கு காரணம் அவர் அவர் செயல்கள் . ஆயினும் தீமை செயாதவருக்கும் தவிர்க்க முடியாத துன்பம் வருகிறது . துன்பத்தில் இருந்து விடுபட மனிதனுக்கு கிடைக்கும் ஆறுதல் கடவுள் .
கடவுள் சக்தி அல்லது இயற்கை சக்தி இப்பிரபஞ்சத்தின் மூலம் உயிர்களுக்கு கொடுக்கும் துன்பங்களுள் தவிர்க்க முடியாத பெரும் துன்பம் மரணம் .
கடவுளை உணரும் பொருட்டும் தேடும் பொருட்டும மரணத்தை கொடுத்தான் இறைவன் .

..கடவுளை நாடி மரண துன்பத்தையும் நீக்க முடியும் … துன்பம் நீங்கி பேர்இன்பம் பெற முடியும் .
தவிர்க்க முடியாத துன்பங்கள், அடைய துடிக்கும் உலக இன்பங்கள், . பேரின்பம் ஆகியவை கடவுள் கொள்கை உருவாக முக்கிய காரணங்கள் .
1.3 கடவுள் கொள்கைகள 
உருவாககும் கேள்விகள்

கடவுள் பிரபஞ்சத்தை உருவாக்கினாரா?அ

ல்லது கடவுளே பிரபஞ்சமா?.கடவு

ள்பிரபஞ்சத்தை தோற்றுவித்த நோக்கம் என்ன ? அவசியம் என்ன .? இக்கேள்விகள் நெடுங்காலமாக கேட்கப்படுபவை
“இப்பிரபஞ்சம . தோன்றுவதற்குமுன் எது அல்லது யார் இருந்தாரோ அவர் கடவுள்” அப்படிஎன்றால் யாரும் பார்த்தறியாத கடவுளுக்கு பிரபபஞ்சத்தை உருவாக்க நோக்கமும் அவசியமும் கூறுவது யாராலும் முடியாது. .

பிரபஞ்சத்தை அவர் உருவாக்கினாரா அல்லது அவரே பிரபஞ்சமா?என்பதையும் யாராலும் சொல்லமுடியாது .
இதை மாணிக்கவாசகர் திரு வாசகத்தில்

” எண்ணுதற்கு எட்டாத எழிலார் கழல் இறைஞ்சி” என்றார் ..
1.4 பிரபபஞ்சம உருவானது . எப்படி ? மனிதன் யார் ? கடவுள் – பிரபஞ்சம்-மனிதன் ஆகியவற்றின் தொடர்பு. என்ன ?
விஞ்ஞானமய கோசம் உள்ள மனிதன் , அறிந்ததில் இருந்து அறியாததை உணர்ந்து சொல்லும் வல்லமை கொண்டவன் . கடவுள் பற்றி ; சித்தர்களும் ஞானிகளும்.? ரிஷிகளும் , இறை தூதர்களும் தங்களது ஆன்ம சக்தியால் உணர்ந்து சொன்னார்கள் .
இதற்க்கு பத்தாம் அறிவு வேண்டும் என்கிறார் திரு மூலர்

இக்கேள்விகளுக்கு திருமூலர் திரு மந்திரத்தில் முதல் பாடலில் தெளிவான பதில் சொல்லி உள்ளார் .
ஒன்றவன்தானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்

சென்றனன் தானிருன் தாணுணர்ந் தெட்டே

திருமூலர் திருமந்திரம் பாடல் 1
பிரபஞ்சம் உருவாவதற்கு முன் இருந்த ஒன்றுதான் கடவுள் .

அவனது அருளின் காரணமாக . ஓம் என்ற பெருவெடிப்பில் அகாரம் என்ற எதிர்மறை சக்தி துகள்களாகவும் மற்றும் நேர்மறை சக்தி துகள்களாக இரண்டு சக்தி நிலையாக மாறினான் . இதை பிரபஞ்சவாலை என்கிறார் போகர் . இதை காயத்திரி சக்தி என்கிறார் விசுவாமித்திரர் .

(பார்க்க காயத்திரி மந்திரம் வாலை தியானம் பதிவு ) இதை ஆம் ஊம் என்றார் கருஊரார், இந்த சக்தி துகள்கள் மகாரம் என்ற நடுநிலை துகளாக மூன்றானது . நாதவிந்து என்ற நான்காம் உயிர் துகள் ஆனது? . நாதவிந்து என்ற உயிர் துகள் நேர்மரை உயிர்துகள் எதிர்மறை உயிர்த்துகள் ஆக பிரிந்தது .
எனவே அகார,உகார , மகார நாதவிந்து ஆகிய ஐந்து அடிப்படை துகள்கள் உருவாகின . இந்த ஐந்தை பஞ்சவிதது என்கிறார் அகத்தியர் . , இந்த பசஞ்ச? வித்துக்களே பஞ்ச பூதமாகின( மண் ,நீர் , நெருப்பு , காற்று ,ஆகாயம் ) .. இந்த பஞ்ச பூதங்கள் பிரபஞ்சமாக உயிர்களாக உருவானது . இந்த உயிர்கள் நால்வகை யோனிகளில் ( பிறப்புவழி ) எழுவகை உயிர்களாக பிறந்தன .இந்த உயிர்களில் ஆறு ஆதாரங்களுடன் 96 தத்துவங்களுடன் ஆதிமனிதன் உருவானான் . . இந்த ஆறு ஆதாரம் பெற்ற மனிதன் இதன் மூலம் கடவுள் கொள்கை உருவாக்கினான். கடவுளை உணர்ந்தான் .
.கடவுளை உணர்தபின் கடவுளை தொடர்பு கொள்ள முயன்றான் அப்பொழுது அவன் ஏழாவது நிராதாரமாகிய சகஸ்ராரம் என்ற ஆதாரத்திற்கு சென்றான் , அஷ்டாங்க யோகத்தில் எட்டாவது நிலை ஆகிய சமாதி நிலையில் தன்னை இறைவனின் ஒருபகுதி என உணர்ந்து இறைவனுடன் கலந்து இறைவனாகிநான் . முக்தி பெற்றான் இறைவன் மனிதனாக உரு மாறினான் மனிதன் இறைவனாகி சுயஉரு பெற்றான் . ..
இப்பாடல் சொல்லும் தத்துவங்கள்.

.பிரபஞ்சம் உருவாவதற்கு முன் இருந்த ஒன்றுதான் கடவுள் இதற்கு உருவமோ, பெயரோ இல்லை . இது ஓர் இறை கொள்கை.
கடவுளை ஒ என்றும் ஓங்காரம் அல்லது ஓம் என்றும் சித்தர்கள் சொல்கிறார்கள் . .. ஓம் பெருவெடிப்பாகியது இதுவே விரிவு அடைந்து அகார உகார, மகார நாத , விந்து ஆகி , பின்பு பஞ்ச பூதமாகி பிரபஞ்சம் உருவானது. இது சித்தர்கொள்கை

வேதங்களும் புராணங்களும் இதை சொல்கின்றன . ஓம் என்ற பெருவெடிப்பில் பிரபஞ்சம் உருவானது என்கிறார் அகத்தியர் .
இன்று பூமி உருவாக்கும் ஓசை ஓம் என்று அறிவியலார் சொல்கிறார்கள்

மாணிக்கவாசகர் திருவாசகத்தில் “ ஓர் உருவம் ஒர்நாமம் இல்லானை ஆயிரம் நாமம் சொல்லி தெல்லேலம் கொட்டாமோ “என்றார்.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றேபுகும் கதி இல்லை நுஞ்சித்தத்து

நின்றே நிலைபெற நீர் நினைந் துய்மினே

திரு மூலர் திருமந்திரம் பாடல் 2104
“ஒருவன் என்றே தெய்வத்தை வணங்கவேண்டும்”

அகத்தியர் ஞானம் 9 பாடல் 4
இந்தஓர்இறை கொள்கையை? .கிறித்துவமும் , இஸ்லாமியமும் சொல்கின்றன .
ஆயினும் மனிதன் வேறு இறைவன் வேறு என்கின்றது . . இது துவைதத கொள்கை ..பக்த்தியோக நிலையில் கடைபிடிப்பது .
.கடவுள் தனது அருளால் தனது ஒரு அம்சத்தை (சக்தியை) பிரபஞ்சமாக விரிவடைய செய்தார் ..

( இறைவனின் மாறுபட்ட தோற்றம் மனிதன் )பிரபஞ்சதின் உயர் அங்கம் மனிதன் . . பிரபஞ்ச மறைப்பில் இருந்து மனிதன் விடுபட்டு மீண்டும் இறை வனாகிறான் .
பிரபஞ்ச மறைப்பு அல்லது இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் தடை மாயை? என்கிறார்கள் வேதாந்திகள் .. உலக மாயையில் இருந்து விடுபட்டு மனிதன் இறைவனாகிறான் . இது அத்வைதம் மற்றும் வசிஷ்டா அத்வைத கொள்கைகள் .
இக்கருத்தை வேதங்கழும் சொல்கின்றன (ரிக்வேதம் புருஷ சூக்தம் 10:8 90 )
“இப்பிரபன்ச்சம் முழுவதும் எனது ஒரு அம்சத்தால் வியாபித்து உள்ளேன் “ கீதை 10.24
பிரபஞ்ச உற்பத்தியில் பரிணாம வளர்ச்சியே மனிதன் . கடவுள் நேரடியாக மனிதனை படைக்கவில்லை . அனைத்து சித்தர்களும் இதை சொல்லி உள்ளார்கள் இன்றைய அறவியல் இதை உறுதி செய்கிறது

இக்கருத்துகளை மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சொல்லியுள்ளார்
“புல்லாகிப் பூடாகி புழுவாய் மரமாகி

பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி

. கல்லாய் மனிதராய் “ என்றார் .
தன்னை கடவுளின் ஒரு அம்சம் என்று உணர்ந்த மனிதன் யோகா வழியில் கடவுளை ஒளிவடிவில் தன்னுள் காண்கிறான் . தன்னுள் கண்ட கடவுளை நோக்கி பயணித்து பல படித்தரங்களை தாண்டி இறைவனுடன் ஒன்றி தானே இறைவன் என்ற நிலை அடைகிறான். இது சித்தர் கொள்கை .
இதை சிதர்கள் “ தான் அவன் ஆதல் “ என்றனர் “நான் சிவனானேன் “ என்கிறார் திரு மூலர்

வேதங்கள் இதை உறுதி செய்கின்றன.
யஜூர்வேதம் ஸ்ரீ ருத்ரம் (8. 1) சொல்வது “நம: சிவாய சிவதராய “ சிவம் தன்னை அடைந்தவனை சிவமாக “சிவதரன் “ ஆக மாற்றுகிறது.
“சிவோகம் “ என்றால் நான் சிவன் என்ற பொருள்தரும் .
இக்கருத்துகளை வேதங்கள் மகாவாக்கியங்களா

க சொல்கின்றன .
ப்ரஜ்ஞானம ப்ரஹம்ம ( ரிக்வேதம் )? =இறைவன் ஞானத்தால் அறியப்படுபவன் .
அஹம் ப்ரஹமாஸ்மி ( யசுர் வேதம் ) நான் இறைவனாய் இருக்கிறேன் . .
தத் த்வம் அஸி (சாம வேதம் ) நீ அதுவாய் ( கடவுளாய் ) இருக்கிறாய்
அயமாத்மா பரம்மா ( அதர்வண வேதம் )
தனது ஆத்மாவே இறைவன்

ஒரு உதாரணம் மூலம் பார்க்கலாம்.

கடலில் இருந்து ஒருபகுதி நீர் ஆவியாகி மழையாகி பல நிலைகளை

கடந்து மீண்டும் கடலுக்கு வருகிறது .
அது போன்று இறைசக்தியின் ஒரு பகுதி தூண்டுதல் இன்றி பிரபஞ்சமாக விரிகிறது .பின்பு அப்பிரபஞ்சம் மீண்டும் இறைசக்தியில் ஒடுங்குகிறது இது இறைசக்தியின் தன்மையால் தானே நிகழ்கிறது .இதற்க்கு நோக்கமோ குறிகோளோ இல்லை,இதை நைமித்திக பிரளயம் என்கிறது வேதம்.?
மனிதனுள் இருக்கும் இறைசக்தி எங்கிருந்து வந்ததோ அந்த இடத்தை தேடி பயணப்படுகிறது . இது முக்திபயணம்.முட

ிவாக இறைவனை அடைகிறது . அதுவே முக்தி என்று சித்தர்கள் சொல்கிறார்கள் . வேதங்களும் உறுதி செய்கிறது . இது? ஆதஅந்திய பிரளயம் ஆகும் .
இன்றைய அறிவியல் ( Stephen Hawkings ஹாகின்ஸ் )இந்த கோட்பாட்டை சிங்குலாரிட்டி என்று சொல்கிறது . பிரபஞ்சம ஒரு புள்ளியில் இருந்து விரிந்து உருவாகிறது . மீண்டும் சுருங்கி அப்புள்ளியாக மாறுகிறது
1.5 மனித பிறவியின் குறிக்கோள் எது?
பெறுதற்கறிய பிறவியை பெற்றும?்

பெறுதற்கரிய பிரானடி பேணார்

பெறுதற்கரிய பிராணிகள் எல்லாம்

பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே

திரு மூலர் திருமந்திரம் பாடல் 2109
பெறுதற்கறிய பிறவியை பெற்று உள்ளவன் மனிதன்.

.மனிதன் மட்டுமே

பெறுதற்கறிய இறைவன?் திருவடியை முயன்று அடயமுடியும் . அப்படி செய்யாத மனிதர் மற்றும் மிருகங்கள் , பெறுதற்கறியஇறைவனின் திருவடி சேரும் முக்தி என்பதை இழந்துவிடுவார்கள் . .
மனிதபிறவியின் குறிக்கோள் . முக்தி . எங்கு இருந்து வந்தோமோ அங்கு செல்வது…

. முக்தி . எங்கு இருந்து வந்தோமோ அங்கு செல்வது..
1.6 கடவுளின் நிலைகள் .

கடவுள்—மனிதன் (பிரபஞ்சம)—முக்தி தொடர்பு .
தோன்றிய தொம்பதம் தற்பதஞ்சூழ்தர

அசிபதம் ஏன்ற அசிபதம் இம்மூண்றோ டேய்தினோன்

ஆன்ற பராபரமாகும் பிறப்பற

வேன்றனன் மானச் சிவமா யிருக்குமே

திரு மூலர் திருமந்திரம் பாடல் 2437
தானவ னாகிய தற்பரந் தாங்கினன்

ஆனவை மாற்றிப் பரமத்தடைந்திடும்

ஏனை யுயிர் வினைக கெய்து மிடஞ்சென்றும

வானும் நிலனும் புகுந்து வருந்துமே

திரு மூலர் திருமந்திரம் பாடல் 2134
பிரபஞ்சமாக உருவாகும் முன் இருந்த இறைவன் ஒருவன் . இந்த நிலையில் அவன் தொம்பதம் அல்லாது தொம்பரம் / பரம் / பரமாத்துமன் / ஆதி/ சிவம் அல்லது ஆதி சிவம்/விஷ்ணு/ பரமபிதா அல்லது கர்த்தர் /அல்லா என்று பலவாறாக அழைக்க படுகிறான் .
அவனின் ஒரு அம்சம் உருவமுள்ள பிரபஞ்சமாக மாறும்முன் சக்தி நிலையில் (Energy status) இருக்கிறான் எதிர்மறை சக்திதுகள்( அகாரம்), நேர்மறை சக்தி துகள்(உகாரம்) , மறை ஏற்றம் இல்லா நடுநிலை சக்திதுகல்கள் (மகாரம் ) நேர்மறை உயிர் சக்திதுகள் (நாதம் ) எதிர்மறை உயிர் சக்திதுகள் (விந்து ) என பஞ்ச வித்து நிலையில் உருவற்ற இறைவனாக உள்ளான் அல்லது .
இந்த பஞ்ச வித்துகள் என்ற சக்தி நிலையில் கடவுள் நிற்குணபிரம்மம் என்று அழைக்கப்படுகிறான். இதுவே ஆதி சக்தி அல்லது காயத்திரி அல்லது பிரபஞ்சவாலை என்று அழைக்கப்படுகிறது .
அவன் பிரபஞ்சமாக மாறி 96 தத்துவங்களாக மனிதனாக உருவானபின் அவனுள் இருக்கும் இறைவன் தம்பதம் ,/தற்பரம்/ வாலை/ என்று அழைக்க படுகிறான் ..
மனிதனின் உடல் அகாரம் உகாரம் மகாரம் என்ற சக்தி துகள்களால் உருவம் பெறுகிறது . நாத விந்து என்ற உயிர்சக்தி, மனிதனுள் உயிர்ஆக உள்ளது .இது ஜீவன் அல்லது உயிர் . உடலையும் உயிரையும் இணைக்கும் சக்தி தற்பரம் என்ற இறைவன் அல்லது சிவம் . இந்த தற்பரம என்ற வாலை ஒளிவடிவில் ஆனந்த மய கோசத்தில் மனிதனிடம் உள்ளது . இதை ஆத்மா என்று சொல்கிறார்கள் .
உயிர் +உடல்+ தற்பரம் (இறைவன் ) ஆகிய மூன்றின் சேர்கை = மனிதன் அல்லது நான் . உடலும் உயிரும் சேர்ந்த ஜீவன் ஆத்மாவுடன் சேர்ந்து ஜீவஆத்மா என்ற மனிதனாகிறான் .
தன்னுள் இருக்கும் இறைவனை மனிதன் உணராமல் இருக்கக்காரணம் மனிதனின் பிற நான்கு கோசங்கள் . அதாவது அன்னமய கோசம் , பிராணமய கோசம் ,மனோமய கோசம் ஆகியவை . இவற்றை கடந்து உள்முகமாக சென்று ஆனந்தமய கோசத்தில் தற்பர தரிசினம் செய்யவேண்டும் .
தன்னுள் இருக்கும் தற்பரம் என்ற இறைசக்தியை யோகவழியில் பரவெளியில் இருக்கும் தொம்பதம் என்ற இறைவனுடன் ஒன்றசெய்வது, அசிபதம் என்று அழைக்க படுகிறது .
இது தான் அவன் ஆதல் என்றநிலை. தொம்பதம் , தற்பதம் அசிபதம் ஆகிய மூன்று நிலைகளை அடைந்தவனுக்கு பிறப்பு இறப்பு இல்லை . அவன் சிவம் ஆவான் . இது நிலைத்த நிலை யாகும் .. இதுவே முக்தி .

இந்த நிலைகளை தேடி அடைய வெட்கபட வேண்டாம்.
யோக வழியில் மரணத்தை மாற்றி மரணம் இல்லாமல் தானவனாகி இறை நிலை அடைந்தவர்கள் முக்தர்கள் .
1.6 முக்தி அடையாத மனிதர்கள் மற்றும் பிற உயிர்கள் மரணத்திற்கு பின் என்னவாகிறார்கள் ?
திரு மூலர் சொல்கிறார்.

தானவ னாகிய தர்பரந் தாங்கினன்

ஆனவை மாற்றிப் பரமத்தடைந்திடும்

ஏனை யுயிர் வினைக கெய்து மிடஞ்சென்றும

வானும் நிலனும் புகுந்து வருந்துமே .

திரு மூலர் திருமந்திரம் பாடல் 2134
அவர்கள் உடல் அகார உகாரா மகார சக்தி துகளகளாக மாறும் .

உயிர் நாத விந்து என்ற உயிர்சக்தி துகள்களாக மாறும் .

இவை இரண்டும் பிரபஞ்சத்தில் இருக்கும் பஞ்ச வித்துக்களில் சேரும் . . .. உடலையும் உயிரையும் இணைககும் தற்பரம் அல்லது இறை அம்சம் அல்லது ஜீவவானுடன் இருக்கும் ஆத்மா .

பரத்துடன் சேரும். மரணித்த மனிதன் அகார உகாரா மகார நாத விந்து வாக மாறி , மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கிறான் .
அதாவது பிரபஞ்சத்தில் இருந்து விடுபடாது பிறவி சுழற்ச்சியில் முக்தி அடையும் வரை சுழன்றுகொண்டு துயர் அடைந்துகொண்டு இருப்பான் .
1.7 அசிபதம் என்ற முக்தியை பெறுவது எப்படி ?
தொம்பத மாயையுள் தோன்றிடும் தற்பதம்

அம்பாறை தன்னில் உதிக்கும் அசிபதம்

நம்புறு சாந்தியில் நண்னு நண்ணுமவ் வாக்கியம்

உம்பர் உரைதொந்தத் தசி வாசி யாமே

திரு மூலர் திருமந்திரம் பாடல் 2432
தொம்பதம் தனது மாயா சக்த்தியால் பிரபன்ச்சமாகி மனிதனாகி . தற்பதமாக தோன்றியது . மனிதனுள் இருக்கும் தற்பதம் தொம்பதத்தொடு இணைவதால் உருவாகுவது அசிபதம் இதனால் சாந்தி என்ற பேரின்பம் கிடைக்கும் . 
. இவ்விதம் மூண்றையும் இணைத்து அசிபதமாக தனவனாக மாறும் தன்மை அல்லது மூன்று பதத்தையும் இணைத்து முக்தி தருவது வாசியோகம்

முக்தி பற்றி விரிவாக அறிய

இனி பார்க்கவேண்டுகிறேன்.
இறை அருள் பெறுக!!! தான் அவன் ஆகுக!!!<
கடவுள் மனிதன் – முக்தி

**************************
( சாகாபாதை தோற்றங்கழும கண்களும் 25 தத்துவங்களும்)
(பகுதி2)

*********
thanks for Raja Krishna Moorthy sir….
 முக்தி என்று உண்டா ?முக்தி என்றால் என்ன ? முக்தியின் குறிக்கோள் .என்ன ? முக்தியில் பல பிரிவுகள் உண்டா? முக்தியில் பல நிலைகள் உள்ளாதா ? முக்தி அடையும் வழி எது ? இந்த அடிப்படை கேள்விகளுக்கு விடைகாணமுயன்றேன்..
இவற்றிற்கு சித்தர்கள் சொன்ன பதிலை சொல்கிறேன் .
இதற்கு முதலில் கடவுளும் மனிதனும் பற்றி அறியவேண்டும் .
2 முக்தி கொள்கை

********************
விஞ்ஞானமய கோசத்தை தாண்டி மனிதன் ஆனந்த மய கோசத்தில் கண்ட உண்மை.தான் முக்க்தி கொள்கை.
முக்தி என்றால் என்ன ? முக்தியின் குறிக்கோள் .என்ன ? முக்த்தியில் பல பிரிவுகள் உண்டா? முக்தியில் பல நிலைகள் உள்ளதா ? முக்தி அடையும் வழி எது ?
2.1 முக்தி என்று உண்டா ?முக்தி என்றால் என்ன ?
ஒவ்வொரு மனிதனும் அடைய வேண்டிய கடைசிநிலைதான் முக்தி. இந்தகடைசி நிலை எப்படிப்பட்டது என்பதில் பலவித கருத்துகள் உள்ளது . இது கடவுள் கொள்கையை நம்புபவர்களுக்கு மட்டும் பொருந்தும். கடவுள் கொள்கை நம்பாதவர்க்கு மரணமே மனிதனின் முடிவு நிலை . .
உலகில் உள்ள மனிதர்கள் யாவரும் தன்னுள் இருக்கும்

இறைசக்தியின் உந்தலால் முக்தி என்பதை தெரிந்தோ தெரியாமலோ அனைவரும் தேடிக்கொண்டு இருக்கிறோம்.. முக்தி என்பது அனைவருக்கு உண்டு..
2.2முக்தியின் குறிக்கோள் எது ? .. .
“எல்லாவித துன்பங்களில் இருந்து விடுபட்டு நிலைத்த பேரின்பம் பெறுதல். “ என்பது முக்தியின் தன்மை அல்லது நோக்கம் அல்லது குறிக்கோள்

இதை கடவுள் கொள்கையை நம்புபவர்கள் அனைவரும் ஒப்பு கொள்கிறார்கள்
2.3முக்த்தியில் பல பிரிவுகள் உண்டா?
முக்தியில் இரண்டு பெரிய கொள்கைகள் உண்டு .

1 மரணித்த பின்பு முக்தி

2 மரணிக்காமல் முகத்தி..
. முக்தி என்பது மரணித்த பின்பா அல்லது மரணிக்காமல் இருப்பதா என்பதை பொருத்தும முக்தியின் தன்மை மாறுபடுகிறது.
2.3.1 மரணித்தபின் முக்தி இரண்டு வகை படும்

1 மரணித்தபின் இறைவன் இருக்கும் இடத்தில் இருந்தால் முக்தி

2. மரணித்தபின் இறைவனுடன் ஒன்றிவிடல் முக்தி
1. மரணித்தபின் .இறைவன் இருக்கும் இடத்தில் இருந்தால் முக்தி

.. தான் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப “மரணித்தபின் இறைவனோடு இருந்து நிலைத்த பேரிபம் அடைதல் என்பது முக்தி , மோச்சம் , சுவனம், நித்திய ஜீவன் “ .

வேதாந்திகளில் ஒருபகுதியினர் , கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் இக்கோட்பாட்டை சொல்கிறார்கள் .
இக்கோட்பாட்டின் படி இறைவன் வேறு மனிதன் வேறு . எனவே முக்தியிலும் இறைவனுடன் ஒன்ற முடியாது. இறைவன் இருக்கும் இடத்தில் இருந்து நிலைத்த பேரின்பம் பெறமுடியும்

இக்கோட்பாட்டை நம்புபவர்களில் இரு பிரிவு உண்டு .
2.3.1.1 மரணித்தபின் மறுபிறவி இல்லாமல் இறைவன் இருக்கும் இடத்தில் முகத்தி
2.3.12 மரணித்தபின் மறுபிறவி பெற்று இறைவன் இருக்கும் இடத்தில் முக்தி
..2.31.1 மரணித்தபின் மறுபிறவி இல்லாமல் இறைவன் இருக்கும் இடத்தில் முகத்தி

கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இறந்தபின் மறுபிறவி இல்லை என்னும் கோட்பாடு உடையவர்கள் . எனவே அவர்கள் இறந்தவர் உடலை பேழையில் பத்திரபடுத்தி கல்லறையில் வைக்கின்றனர் …
நியாய தீர்ப்பு நாளில் அனைவரும் உயிர் தெழுவார்கள் . அதுவரை கல்லறையில் இருப்பார்கள் ..
அதன் பின் நியாய தீர்ப்பு வழங்கப்படும் .அவரவர் பாப புண்ணியங்களுக்கு ஏற்ப இறைவன் இருக்கும் இடமாகிய சுவர்க்கம் அல்லது நரகம் செல்வார்கள் .
2.3.12 மரணித்தபின் மறுபிறவி பெற்று பாவத்தை போக்கி இறைவன் இருக்கும் இடத்தில் முக்தி

இது இந்து வேதந்திகளில் ஒரு பிரிவு நம்பிக்கை

ஒருவர் செய்த பாவ புண்ணிய ஆன்ம சாதனைக்கு ஏற்ப மரணத்திற்குப்பின் முக்தி அல்லது மறுபிறவி ஏற்படுகிறது .
இறந்தபின் ஆண்மசாதனை முடித்த மகான்கள் ஒளிபாதை வழியில் தபலோகம், ஜனலோகம் ,மகாலோகம் ஆகிய இடங்களுக்கு செல்வார்கள் . இவர்கள் மறுபடி பிறப்பதில்லை

பிறர் மரணித்தபின் புகை பாதை வழியே பிதுர்/ பித்ரு லோகம் மற்றும்

எமலோகம் செல்வார்கள் . அங்கு அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப எமதர்மனால் தீர்ப்பளிக்க பட்டு சுவர்க்கம் அல்லது நரகம் செல்வார்கள் .
நரகங்களில் ஏழு வகை உண்டு .

அவைகள் ரெளராம் , மகா ரெளரம், வஹ்னி,வைதரிணி, கும்பிபாகம் , தாமசம். தீர்க்க தாமசம் , . பாவங்களின் தீவீரங்களுக்கு ஏற்ப இந்த நரகங்களுக்கு சென்று தண்டனை பெறுவார்கள் . அங்கு பாப புண்ணிய தீர்ப்புக்கு ஏற்ப சிலகாலம் தங்கி பின்பு அவரவர் பாப புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடி பிறப்பார்கள் . . இவ்விதம் பிறந்தவர்கள் தான் செய்த பாவ கர்மங்களுக்கு ஏற்ப புதிய பிறவியில் துயர் அனுபவித்து தனது கர்மங்களை போக்க வேண்டும் .அதன்பின் புன்னியம் செய்து இறைவனனிடம் செல்ல வேண்டும் . இதற்க்கு பலபிறவிகள் பலவித உயிர்களாக பிறவி எடுக்க நேரிடும் .. .
இதிலும் சிலர் நம்பிக்கை

.மரித்தவர்கள் பிதுர் லோகம் செவார்கள் . அவர்களின் பிள்ளைகள் பிதுர் கர்மா என்ற சடங்கு செய்தால் அவர்கள் ஆன்மா சாந்தி அடைந்து சுவர்க்கம் செல்லும் என்று தர்ப்பணம் என்ற சடங்கு செய்வார்கள் . இது பிதுர்கர்மம் எனப்படும் ..
மொத்தத்தில் மரித்த மனிதன் புண்ணியம் செய்து ஆன்ம சாதனை செய்தால் இறைவன் அருகே துயரம் இன்றி நிலைத்த பேரின்பம் பெற்று முகத்தி அடைவான் .. பாவம் அல்லது முற்பிறவி கரும வினை முழுவதும் தொலைத்து புண்ணியம் தேடும் வரை பிறவிகள் தொடரும் .
இவர்களின் நம்பிக்கையின் படி உடல் அழியும் ஆன்மா அழியாது . ஆன்மா புது புது உடல் எடுக்கும் . ஆகையால் உடலை எரித்து சாம்பலை புண்ணிய நதிகளில் கரைத்து பிதுர்கமம் செவார்கள் . பிதுர் கர்மம் என்பது இறந்தவரை மோட்சம் செல்ல வைக்கும் சடங்குகள்.
இந்த சடங்குகள் அறிவியல் சார்ந்து இருப்பதில்லை . ஆயினும் இறந்தவரின் ரத்த சொந்தங்கள் தங்களது சோகத்தில் இருந்து மீள உதவும .மனோதத்துவ செயல் முறைகள் .

இதுவரை பேசியது துவைத்த கொள்கை .
2.32. மரணித்தபின் மறு பிறவி பெற்று இறைவனுடன் ஒன்றிவிடல் முக்தி.
இந்த கோட்பாடு இறைவனின் ஒரு அம்சம் பிரபஞ்சமாக, மனிதனாக மாறி உள்ளான் என்ற அத்வைத கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது . இவர்களும் மறு பிறவி ம சுவர்க்கம் , நரகம் ஆகிய நம்பிக்கை உடையவர்கள் .
ஆயினும் முக்தி என்பது மரணித்தபின் இறைவனுடன் ஒன்றிவிடுதல் என்பது இவர்கள் நம்பிக்கை .
மேலே சொன்னவைகள் மரணித்தபின் முக்தி என்ற கோட்பாடு . பக்தி மார்க்க கோட்பாடு . வேதாந்த கோட்பாடு
2.3.2 மரணிக்காமல் முக்தி அல்லது இறுத்தி முக்தி
மரணத்தை கடந்து மனிதன் தன்னுள் இருக்கும் ஒளிவடிவ இறைவனுடன் ஒன்றுதல் .பின்பு தன்னுள் இருக்கும் இறை சக்தியை பிரபஞ்சதில் இருக்கும் இறை சக்தியுடன் இணைக்க செய்து தானே இறைநிலையடைந்து இறைவனாக மாறுதல் . இறவாமல் மீண்டும் பிறவாமல் நிலைத்த பேரின்பம் பெறுதல் முகதி.

இதுவே மரணமில்லா பெருவாழ்வு .. மரணத்திற்கு பின் முக்தி இல்லை . இவை சிதர் கோட்பாடு .
உடம்புளே உத்தமன் கோவில்கொண்டான்என்

உடம்பிணை யானிருந் தோம்பு கின்றேனே

திரு மூலர் திருமந்திரம் பாடல் 725
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே

திரு மூலர் திருமந்திரம் பாடல் 724
உடம்பினுள் (தற்பதம் ) இறைவன் கோவில் கொண்டு உள்ளான் .

எனவே உடலை கவனமாக அழியாமல் பாதுகாக்கிறேன்

உடலானது , உயிரையும் ஆன்மா என்ற தற்பதம் என்ற இறைவனையும் தாங்கி நிற்கிறது .
உடம்பு அழிந்தால் உயிரார் என்ற மனிதன் அழிவான் . அதனால் மெய்ஞானம் என்ற முக்தி அடைய மாட்டார் . ஆகையால் ஊடம்பு அழியாமல் வைத்திருக்கும் உபாயம் என்ற அறிவியல் அறிந்து உடல் அழியாமல் பாதுகாக்கிறேன் .

அதனால் உயிர் போகாமல் இறைவன் என்னுள் இருக்கிறான் .
நான் அவனுடன் சேர்ந்து முத்தி பெறுகிறேன் . இது இருத்தி முத்தி .

இதுவே மரணமில்லா பெருவாழ்வு.

முக்தி கோட்பாட்டில் எழும் கேள்விகள்

இந்த எளிமையான முக்தி கோட்பாட்டில் புதைந்துள்ள கேள்விகள.. . மரணம் என்றால் என்ன ? மரணத்தை கடத்தல் என்றால் என்ன ? மரணமில்லா பெருவாழ்வு பெறுவது எப்பாடி? நிலைத்த பேரின்பம் எது ? முக்தியால் கிடைப்பது என்ன? முக்தியின் நிலைகள் எவை?ஆகியவை

இந்த கேள்விகளுக்கு விடை வரும் பதிவுகளில் பார்ப்போம் .
இறை அருள் பெறுக!!!தான் அவன் ஆகுக!!!

கடவுள் மனிதன் – முக்தி

****************************
( சாகாபாதை தோற்றங்கழும கண்களும் 25 தத்துவங்களும்)
(பகுதி3)

*********
thanks for Raja Krishna Moorthy sir….
 . மரணம் என்றால் என்ன? மரணத்தை கடத்தல் என்றால் என்ன ? மரணமில்லா பெருவாழ்வு பெறுவது எப்படி? நிலைத்த பேரின்பம் எது ? முக்தியால் கிடைப்பது என்ன? முக்தியின் நிலைகள் எவை?
2.3 மரணம் என்றால் என்ன?

******************************
உடலை விட்டு உயிர் பிரிதலை மரனம் யென்று சொல்கிறோம் . எவ்விதம் மரணம் அடைகிறான் எப்படி தவிர்கலாம் என்று பார்ப்போம் மனிதன் மூன்று வகையில் மரணம் அடைகிறான்.

1.இயற்கை மரணம்

2.இளவயது மரணம் அல்லது இயற்கையான அகால மரணம்

3.இயற்கை இல்லா அகால மரணம்

இயற்கை மரணம்
1. வயது முதிர்ந்து மூப்பு அடைந்து தீர்க்கமுடியாத நோயால் பினைக்கபட்டு பிணியால் மரணம் அடைகிறான். இது இயற்கை மரணம். இதை senescence என்கிறது அறிவியல் . இது மருத்துவத்தால் தடுக்க முடியாதது, சித்தர்களின் காய சித்தி வழியில் மரணத்தை தடுக்கலாம் ..
2..இளவயது மரணம் அல்லது இயற்கையான அகால மரனம்

வயது முதிராமல் நோய்,பினி ,கன்மம் என்ற தீர்க்கமுடியாத நோய்களால் மரணம் ஏற்படுகிறது . புற்றுநோய் இதய கோளாறு நுரை ஈரல் கோளாறு . சிறுநீரக கோளாறு போன்ற தீர்க்க முடியாத பினிகளாள் மரணிக்கிறார்கள் . இது இளவயது மரணம் . அல்லது இயற்கையான அகாலமரணம்
3.இயற்கை இல்லா அகால மரணம்

. . கொலை, தற்கொலை, விபத்து , விசகடி ,மிருகங்கள் அல்லது பிற உயிரினங்கள் தாக்குதல், இயற்கை பேரிடர் , இடுமருந்து என பல காரணங்களாள் மரணிக்கிறார்கள் . இவை இயற்கை இல்லா மரணம் ..
இந்த இயற்கை இல்லா மரணமடைந்தவர்களில் சிலர் பேய்களாக உலவுகிறார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது . சித்தர்கள் பேய்கள் இல்லை என்ற கோட்பாடு உடையவர்கள் .
இம் மூன்றுவித மரணங்களிலும் அடிப்படையாக இருப்பது செல் மரணம் .என்கிறது இன்றைய அறிவியல் .. மரணம் அடையும் உடல்பற்றி அறிந்தால் மரணம் தவிற்பது அல்லது கடப்பது புரியும் .
சித்தர்களின் மருத்துவ கோட்பாட்டின்படி உடல்கூறு என்பது

ஒன்றுள் ஒன்றாக அமைந்த மூன்று தேகங்கள் கொண்டது . . .
தேகங்கள் மூன்று

1 பருஉடல் அல்லது ஸ்தூல தேகம்

2 நுண்உடல் அல்லது சூட்சம தேகம்,

3காரண தேகம்
1 பருஉடல் அல்லது ஸ்தூல தேக மரணமும் தவிர்த்தலும். ,

பருஉடல் என்பது வெளி உறுப்புகள் மற்றும் உள் உறுப்புகளால் ஆனது..முடி, நெற்றி ,கண் காது மூக்கு வாய் மார்பு ,கை , கால், பாலின உறுப்பு போன்றவை வெளி உறுப்புகள். மூளை , நுரை ஈரல், இதயம் கல்ஈரல், மண் ஈரல் . சிறு நீரகம் , குடல்கள் , சிறுநீர்ப்பை, சினைபை / விதைகொட்டை ஆகியவை உள் உறுப்புகள் . பல உறுப்புகளால் அமைந்த உடலே பருஉடல் அல்லது ஸ்தூல தேகம் .. இந்த உறுப்புகள் தோல் , தசை, நரம்பு, எலும்பு மஜ்சை, இரத்தம் , சுக்கிலம் / சுரோணிதம் ஆகிய? ஏழு தாதுக்களால் ஆனது .
இன்பம்,துன்பம் துக்கம், மகிழ்ச்சி கோபம். பயம், வேதனை , அருவருப்பு , நோவு, வலி ,பயம்,நடுக்கம், குளிர்ச்சி வெப்பம் ,இனிப்பு கசப்பு, இசை ,சத்தம் , ஆகிய மனதாலும் உடலாலும் அறியப்படும் உணர்வுகளை பிரித்து அறியக்கூடியது. பருஉடல்.

பருஉடலில் மட்டும் ஏற்படும் உள் மற்றும் வெளிப்புற தாக்குதல்களால் வலி , நோவு உண்டாக்குகின்றன . இதனால் துயரம் உண்டாகிறது .. இவை நோய் என்று அறியப்படும் .
நோயை போக்க மூலிகை மருந்துகள் , உணவுகள், ஆசனங்கள் , ஒத்தடங்கள் , பத்துகள் , தடவுதல் , குளியல் , ஆகியவை பயன்படும்.இவைகள் சித்த மற்றும் ஆயுர்வேத் மருதத்துவத்தில் பயன் படுத்தபடுகின்றன . பெரும்பாலும் இம்மருந்துகள் நோயை போக்கும் தன்மை கொண்டவை . நமது உடல் உருவாக்கும் ஆண்டி பாடி என்ற புரதத்தை உருவாக்கி ,உடல் உறுப்புகளை பலப்படுத்தி நோயை போக்குகின்றன
உடலி வெளியே இருந்து புகுந்த நச்சுகள் மற்றும் உடலில் உள்ளே உற்பத்தியான நச்சுகளை ஒன்பது பெரும் துவாரங்கள் வழியாகவும் மூன்றுகோடி நுண் துவாரங்கள் வழியாகவும் பருஉடல் வெளிஏற்றுகிறது எனவே பக்க விளைவுகளை பெரும்பாலும் உருவாக்குவது இல்லை .
ஹோமியோபதி மருந்துகள் ஒத்தவை ஒத்தவற்றை குணமாக்கும் என்ற கோட்பாடின்படி பக்க விழைவு இன்றி நோய் நிலையில் இருந்து உடலை ஆரோக்கியமாக மாற்றி நலமாக்குகின்றன.இந்த மருத்துவமுறைகள் யாவும் மாற்று மருத்துவமுறைகள் என்று அறியப்படுகின்றன
மாற்று மருத்துவமுறைகள் பெரும்பாலும் நமது உடலில் ஆண்டி பாடி என்ற புரதத்தை உருவாக்கியும் ,உடல் உறுப்புகளை பலப்படுத்தியும் நலமாக்குகிறது.
ஆங்கிலமருத்துவம் பரு உடல் அமைப்பை விரிவாக ஆராய்ந்து உள்ளது. அதில் உருவாகும் நோய்களை கண்டறிய சிறந்த , போற்றத்தக்க நோய் ஆய்வு முறைகளை உருவாக்கி உள்ளது .

பரு உடல் நோய்களை போக்கும் மருந்துகள்(curative medicines curativec ) நோயால் உருவாகும வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்துகள் ( sedatives ), நோயை உள்ளே அமுக்கி துயர் தெரியாமல் செய்யும் ஊக்க மருந்துகள்(Steroids pain killers ) பரு உடல் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பரு உடலில் தொற்றிக்கொள்ளும் கிருமிகளை கொள்ளும் கிரிமினாசினி மருந்துகள் ( Antibiotics )

உடல் உறுப்புகளை தூண்டும் சரப்பி( Hormones )மாருந்துகள் ஆகியவை பயன் பாடுத்தப்படுகின்றன .
அவசர உலகில் அவசரமாக நோயை போக்க விரும்புகிறோம் ., எனவே . நோயால் உருவாகும வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்துகள் ( sedatives ), நோயை உள்ளே அமுக்கி துயர் தெரியாமல் செய்யும் ஊக்க மருந்துகள்(Steroids pain killers ) பரு உடல் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பரு உடலில் தொற்றிக்கொள்ளும் கிருமிகளை கொள்ளும் கிரிமினாசினி மருந்துகள் ( Antibiotics )

அதிகம் பயன்படுத்த படுகின்றன 
ஆங்கில மருத்துவமுறையில் ..

இதனால் நோய் குறைந்தது போல் தோன்றும் . நோவு மறைந்தது போல் தோன்றும் . பல பக்க விழைவுகள் உருவாகும். உடல் எதிர்ப்பு

சக்தியை இழக்கிறது . உடலில் உருவாகும் நச்சு கழிவுகள் வெளி ஏற்றபடாமல் போகிறது .நோய் வலிமை பெற்று வேறு விதமாக தாக்குகிறது . எனவே நல்ல ஆங்கில மருத்துவர்கள் இத்தகைய மருந்துகளை மிக குறைவாக பயன் படுத்துவார்கள் .
ஆங்கிலமருத்துவம் பயன் படுத்தி இக்குறைகளை அறிந்தவர்கள் மாற்று மருத்துவத்தை நாடுகிறார்கள் .
குறிப்பாக விசங்களால் , வைரஸ் தாக்கத்தால் வரும் நோய்களை போக்கும் வழி முறைகள் ஆங்கில மருத்துவமுறைகளில் பெரும்பாலும் இல்லை . உதாரண மாக மஞ்சள் காமாலை , பெரிய அம்மை . வைரஸ் காய்ச்சல்கள் . டெங்கு , சிக்கன் குன்யா பன்றிக்காயசல் ஆகியவை .
 இத்தகைய நோய்கள் மாற்று மருத்துவமுறைகளில் எளிதாக போக்கிவிடமுடியும் .
பரு உடல் நோய்களை போக்க முடியாத நிலையில் மரணம் நேருகிறது .. இது வயோகிதத்திலும் ஏற்படும் .
இளம் வயதிலும் ஏற்படும் . இந்த நோய் களை போக்கி மரணத்தை தவிர்க முடியும் ..
2.நுண் உடல் அல்லது சூட்சம தேக மரணமும் தவிர்த்தலும்

பரு உடலுக்கு உள்ளே அமைந்திருப்பது நுண் உடல் .

உடலுள் இருக்கும் ஆறு ஆதாரங்களும் , உடலுக்கு வெளியே இயங்கும் நிறாதாரம் ஒன்றும் மாக ஏழு ஆதாரங்களில் இயங்கும் சக்கரங்களும் , கண்களுக்கு புலனாகாத 10நாடி களும் . 10 வாயுக்களின் ஓட்டங்களும் நுண் உடலில் அடங்கும் . ஏழு ஆதாரங்கள் பற்றி விரிவாக சொல்லி உள்ளேன் . தச நாடிகளையும் அதில் தச நாடிகளின் இயக்கங்களையும் பற்றி தனிப்பதிவு செய்கிறேன் ..
சூக்கும உடலில் பஞ்ச பூதங்களும் இயங்குகின்றன .

இவை சக்தியை உருவாக்கி சக்தியை பரிமாறும் . சக்தி பலவித ஓட்ட ங்க்களாக உள்ளன .. இந்த சக்தி ஒட்டாமே சக்த்தியை உருவாக்கி அனைத்து செல்களுக்கும் சக்தியை எடுத்து செல்கின்றன . கழிவுகளை வெளியேற்றுகின்ற

ன ., பஞ்ச பூதங்களும் சமநிலையில் இயங்கினால் சக்தி ஓட்டம் சீராக இருக்கும் . ஆகையால் மரணம் இல்லை .
சக்தி சமநிலையில் மாறுபாடு ஏற்பட்டால் பிணி உருவாகிறது .பிணி சூக்கும தேகத்தில் பிணைந்து உள்ளது . பிணியால் மரணம் ஏற்படுகிறது . நமது உடல் சக்தி சமநிலை அற்ற வகையில் மரணிக்க படைக்கப்பட்டு உள்ளது .
இதனால் மூப்பு , பிணி ,சாக்காடு உருவாகிறது .அல்லது அகால மரணம் மற்றும் இயற்கை அற்ற மரணம் ஏற்படுகிறது .. இதுபற்றி திரு மூலர் சொல்வதை பார்ப்போம்.
ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள

மூத்தான் இறைக்க இளையான் படுத்த நீர்

பாத்தியிற் பாயாது பாழ் பாய்ந்து போயிடிற்

கூத்தி வளர்த்த கோழிபுள் ளாமே

.திரு மூலர் திருமந்திரம்2873
நமது சூக்கும உடலில் ஏழு ஆதாராங்கள் சக்தியை உருவாக்கி சேமித்து பரிமாற்ற உதவுகின்றன இதில் சூரியகலை என்ற ஏற்றம் சக்தியை . மூலாதாரத்தில் இருந்து மேலே ஏற்றி சகஸ்ராரம் கொண்டுசென்று அங்கு சக்தியை எடுத்து பரிமாற்றம செய்ய சந்திர கலைக்கு கொடுக்கிறது . சூரிய கலையில் ஏற்றம் பெற்ற சக்தியை சந்திரகலை பரு உடலுக்கு ஏற்றி உடல் உறுப்புகளுக்கு பரிமாறுகிறது . உடல் உறுப்புகளுக்கு பாரிமாறும் நிலையில் சந்திரகலை இளயான் என்று அழைக்கப்படுகிறது .
உடலுக்கு தேவையான சக்தி உருவாக்கத்திலும் பரிமாற்றத்திலும் சமநிலை இல்லாமல் குறைபாடு இருந்தால் உயிர் அழியும் . விலைமகளிர?் வீடுகளில் இருக்கும கோழிகள் வாடிக்கையாளர்களுக்கு விருந்து படைக்க அழிக்க படுவதுபோல் பிணியால் மரணம் நேரும்

நுண் உடலில் இருக்கும் பிணிகளை போக்க கல்ப மருந்துகளும் வாசி யோகமும் பயன்படும் , கல்ப மூலிகைகளும் கல்ப பஸ்பங்களும் உட்கொண்டு மரணத்தை கடக்கமுடியும் .
சித்தர் வழிமுறைகள் மரணத்தை கடக்க செய்வதில் இன்றைய அறிவியலிலும் மேன்மை பெற்றவை என்பதை பார்ப்போம் …
இன்றைய அறிவியல்படி நுண் உடல் என்பது செல்களால் உருவானது . செல்கள் உட்புறம் DNA , RNA ஆகிய Acid கள் உள்ளன . எனவே செல்கள் ஆசிட் தன்மை வாய்ந்தவை .. ஒரு செல் தனது செயல் பாட்டால் சக்தியை உருவாக்கி கொடுக்கிறது .
அப்பொழுது செல்லுக்குள் கழிவு பொருட்கள் ந்ச்சு பொருட்கள் உருவாகிறது இந்த விச பொருட்கள் செல்களை அழிக்காமல் இருக்க நச்சு பொருள்களை செல் வெளியேற்றுகிறது .
செல் ரத்தத்தில் இருந்து சத்துகளை பெற்று தன்னுள் இருக்கும் கழிவுகளை வெளியேற்றி ரத்தத்தில் சேர்க்கிறது .. இந்த செயல்பாடு Acid base balance என்ற நிலையில் சவ்வூடு பரவல் முறைகளில் நடை பெறுகிறது . இந்த செயல்பாடு சரியாக இருந்தால் உடல் வலுவான நிலையில் இருக்கும் .
உடலின் ஆசிட் என்பதை புளிஎன்றும் , பேஸ் என்பதை உப்பு என்று பிரிந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் சொல்லி உள்ளார்கள் . உடலின் புளி உப்பு சமநிலை யானது பஞ்ச பூத சமநிலை உருவாக்கி மரணத்தை கடக்கும் என்று சித்தர்கள் சொல்லி உள்ளார்கள். அதற்கான கல்ப மருந்துகள் ,மருத்துவ முறைகள் சொல்லி உள்ளார்கள் .
இதுவே இளமையுடன் மரணத்தை தாண்டும் உபாயம் ..
கார சார சமநிலை Acid base balance எப்படி உருவாகிறது?

நமது ரத்தம் காரத்தன்மை கொண்டது (Base ). செல்லின் உட்புறம் புளிதன்மை கொண்டது (Acid). . செல்லானது நானோ துளைகள் கொண்ட சவால் மூடப்பட்டு உள்ளது.
செல்சுவர்களின் ஊடே நானோ அளவு நுண் துகள்கள் மட்டும் பயணம் செய்யும் . நானோ துளைகளின் வழியாக சவ வூடு பரவல் முறையில் சத்து பொருட்கள் உள்ளே செல்கின்றன .கழிவுகள் வெளியே செல்ல்கிறது .
இதற்க்கு அடிப்படை காரணம் இரத்தத்தின் கார தன்மையும் செல்களின் புளி தன்மையும் ஆகும். இது தொடர்ந்து பராமரிக்கபடவேண்

டும் . . அதாவது ரத்ததின் காரதன்மையும் செல்களின புளி தன்மையும் .காக்கப்படவேண்டும் .
இரத்தம் காரத்தன்மையை இழந்துவிட்டால் செல் கழிவுகளை வெளி ஏற்ற முடியாது சதது பொருட்கள் செல்லுக்குள் வராது . அது போன்று . செல்லின் உட்புறம் அமில தன்மையை இழந்தால் . கழிவுகளை வெளி ஏற்ற முடியாது சதது பொருட்கள் செல்லுக்குள் வராது.
செல் தொடர்ந்து வேலை செய்வதால் செல் புளிதன்மை இழக்கும் நிலை அடைகிறது .

செல் ரத்தத்தில் இருந்து சத்து பொருட்களை கிரகிக்க முடியாமல் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் போய்விடுகிறது . 
அந்தசெல் தன்னை தானே அழித்துகொள்கிறது . அதன் பின் இறந்த செல் முடிந்தவரை கழிவுகளை வெளியேற்றுகிறது.

. தன்னைத்தான் அழித்துக்கொண்ட செல் ரத்தத்தில் இருக்கும் சத்து பொருட்களை எடுத்து கொண்டு மீண்டும் புதிதாக உருபெறுகிறது .

அப்போது சில ந்ச்சு பொருட்களை செல் வெளியேற்ற முடியாமல் போகிறது . இந்த நச்சு பொருட்கள் புதிய செல்லுடன் ஒட்டிகொள்கிறது ..
இவ்விதம் செல்லுடன் ஒட்டி கொள்ளும் விசங்களால் செல் தனது செயல் பாட்டில் ஒருபகுதியை இழக்கிறது. .
இவ்விதம் செல் தன்னைத்தானே அழித்தும் புதுப்பித்து கொள்ளும் போது செல்களில் விச தன்மை அதிகரித்துக்கொண்டே செல்கிறது . . இதனால் செல் தனது புதுப்பிக்கும் உயிர்சக்தியை இழக்கிறது , இதனால் பலவித? பிணிகள் உருவாகிறது .
நோய்வாய்பட்ட செல் அதிகபட்சம் சுமார் 30௦முறை தன்னை தானே புதுப்பித்துக்க

ொள்ளும் . இதன் பின் செல் புதுப்பிக்கும் தன்மை இழந்து விடுகிறது . ஆகையால் செல்கள் நிறந்தரமாக அழிந்து விடுகின்றன . 
செல்களில் உள்ள கழிவுகள் கூடக்கூட உடல் உறுப்புகள் செயல்திறன் இழக்கின்றன .

இதுவே முதுமை . முடிவில் செல்கள் முழுமையாக ஒரு அவயவத்தில் அல்லது பல உறுப்புகளில் செயல் இழந்து போனால் மரணம் நேருகிறது .

மூளையில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்பட

ாமல் போகும்போது மூளை சாவு ஏற்படுகிறது . அப்பொழுது பிறஉறுப்புகளிள் உள்ள செல்கள் குறிப்பிட்ட நேரம் வரை உயிருடன் இருக்கும் . அதன் பின் அணைத்து செல்களும் மரணிக்கும் ..
அனைத்து செல்களும் மரணிக்கும் போது மனிதனுக்கு முழுமையான மரணம் நேர்கிறது . . இது இயற்கை மரணம் .

இள வயது மரணம்
புற்றுநோய்

. செல்களில் ஏற்படும் தீயமாற்றம் உறுப்புகளில் சிதைவை அல்லது இயற்கைக்குமாறான வளர்ச்சியை ஏற்படுத்துகிறது இது இள வயது மரணம் மற்றும் அகால மரணத்தையும் ஏற்படுத்தும் .

மரணங்களில் கொடுமையானது புற்றுநோய் . இதை சுருக்கமாக பார்ப்போம் .
செல்களில் தேங்கும் கார்சிநோஜன் என்ற ந்ச்சு கழிவு தேங்கும் அளவு கூடினால் செல்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து விடுகிற்து . இதனால் புற்றுநோய் செல்லாக மாறுகிறது . புற்று நோய் செலகள் பெரியவை மற்றும் வேகமாக பெருகும் தன்மை கொண்டவை . இதனால் புற்று கட்டிகள் , அல்லது உறுப்புகளில் தேவை அற்ற வளர்ச்சி அல்லது சிதைவு ஏற்ப்பட்டு மரணம் நிகழ்கிறது . செல்களில் கார்சினோஜன் விஷம் கூடுவதால் அளவு கடந்த வலி சோர்வு ஏற்படுகிறது. உறுப்புகள் செயல் இழக்கின்றன .. எனவே தாங்கமுடியாத துயரம் ஏற்பட்டு மரணம் நேர்கிறது . இந்த மரண நேரவலியை துடிப்பை போக்கும் மருந்துகள் ஆங்கில மருத்துவத்தில் இல்லை ஆகையால் பிறமரணங்களை விட புற்று நோய்க்கு பயப்படுகின்றார்கள் .
செல்களின் புதுப்பிக்கும் திறன் மற்றும் தூய்மையை நிர்ணயிப்பவை

1.ஆசிட் பேஸ் பேலன்ஸ் மற்றும் 2.செல்களில் தங்கும் விசங்களை போக்கல. அல்லது செல்களை சுத்தம் செய்தல் .
இந்த இரண்டும் சரியாக இருந்தால் செல்கள் ஆரோக்கியமாக இருக்கும் . உறுப்புகள் இளமையாய் இருக்கும் . மனிதன் இளமையை இருப்பான் மரணம் தவிர்க்கப்படும் .

இத்தகைய தொழில் நுட்பத்தை ரேஜூவிநேசன் என்கிறனர் இன்றைய மருத்துவ உலகம் இன்றயா அறிவியல் இந்த தொழில்நுட்பத்தில் முழுமை பெறமுடியவில்லை. அவர்கள் வெற்றி பெறவில்லை . ஆராய்சிகள் தொடர்கின்றன . ஆகையால் புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை . வலியும் மரணமும் தவிற்கப் படவில்லை.
சித்தர்கள் சூக்குமதேகத்தில் (செல்களாள் ஆணஉடல் )அதாவது செல்களில் உவர் என்ற விஷம் அதிகமாவதால் உடல் செயல் இழந்து மரணமடைகிறது என்று 5000 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லிவுள்ளார்கள் . இந்த வுவர்( carcinogen and other toxins) என்ற விசத்தை போக்கி மரணத்தை வென்றேன் என்று சித்தர்கள் சொல்கிறார்கள். இந்த உவர் கோழை உருவாக்கும் . கோழை மரனம் உண்டாக்கும் .
கோழையை போக்க இந்த வுவர் என்ற விசத்தை போக்கி மரணத்தை வென்றேன் என்று சித்தர்கள் சொல்கிறார்கள்..
“கோழையை வென்றேனப்பா யெமனை வெண்றேனப்பா” என்கிறார் காகபுசுண்டர்

இன்றும் சித்தர்களின் இந்த தொழில் நுட்பம் செயல் படுகிறது

உடலின் ஆசிட் என்பதை புளிஎன்றும் , பேஸ் என்பதை உப்பு என்று பிரிந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் சொல்லி உள்ளார்கள் . உடலின் புளி உப்பு சமநிலை யானது பஞ்ச பூத சமநிலை உருவாக்கி மரணத்தை கடக்கும் என்று சித்தர்கள் சொல்லி உள்ளார்கள். அதற்கான கல்ப மருந்துகள் ,மருத்துவ முறைகள் சொல்லி உள்ளார்கள் .
இதுவே இளமையுடன் மரணத்தை தாண்டும் உபாயம் .
“. புளி உப்பு , அறிந்துண்டால் யாக்கைக்கு அழிவு இல்லை “ என்கிறார் யூகிமுனி . . புளி உப்பு , என்பது நாம் சாப்பிடும் உப்பு புளி இல்லை . புளி உப்பு என்பவை மூலிகை கல்ப மருந்துகளும் பஷ்பங்களும் ஆகும்.
. இன்றும் சித்தர்களின் இந்த தொழில் நுட்பம் செயல் படுகிறது இம்முறைகள் சாகாகல்வியாகும் .
காரண தேகம்

சூக்கும தேகத்தை இயக்குவது காரண தேகம் . காரண தேகத்தை இன்றய அறிவியல் ஜீன் பாடி என்கிறது.. காரண தேகத்தில் உருவாவது கன்ம வியாதி .

பெரும்பாலும் பிறக்கும் போது உருவாவது

சித்தர் திருமூலர் இதுபற்றி சொல்கிறார்
திங்கள் பத்தாகிற் தேய் வொடு வாயுசேர்ந்

தங்கிமலர்த்தி யமளியாய் கீழ்ணோக்கிப்

பொங்கி பிறந் தனாள்புகழ்வார் வெறுவீணர்

தங்கி செனிக்கையில் றாணோயு முற்றதே

திரு மூலர் கருக்கிடை 600 பாடல் 16
பெண் கற்பமுற்று பத்து மாதம் சென்றபின் வெப்பமும் அபாண வாயுவும்

சேர்ந்து கருவில் இருக்கும் குழந்தையை கீழ்ணோக்கி தள்ளும்

குழந்தை பிறந்தது யென்று வீணர்கள் மகிழ்வார்கள். குழந்தை கருதரிக்கும் போது கன்ம வியாதியும் சேர்ந்து பிறந்தது.

குடி வழியே தொடருமடா கன்மந்தானும்

குறிப்பறிந்து கன்மத்தை நிவர்த்தி செய்யே

அகத்தியர் கன்ம காண்டம் 300 பாடல் 12
மரபுவழி நோய்கள் பரம்பரையாக தொடரும் . இதன் குறிகள் சாதாரன நோய் போல தோண்றும் .
ஆயினும் கன்ம நோயை சாதாரன நோயில் இருந்து வேறு படுத்தி அறிய வேண்டும். அதற்கான மருத்துவம் செய்து நலமாக்க வேனண்டும்.
அகத்தியர் கன்மம் பற்றியும் ,அதை நலமாக்கள் பற்றியும் 300 பாலடல்கள், அகத்தியர் கன்ம காண்டம் யென்ற நூலில் பாடி உள்ளார் . . ஜீன்தேகத்தில் அதாவது ஜீன் குறை பாட்டால் புற்று கட்டிகள் உருவாகிண்றன யென்று இன்றய ஆங்க்கில மருத்துவம் சொல்கிறது. ஆனால் இதுவரை நலமாக்கும் மருந்துகள் கண்டு பிடிக்கபடவில்லை .
சித்தர்கள் 5000 ஆண்டுகளூக்கு முன்பு கன்மத்தால் புற்று நோய் காரண தேகத்தில் உருவாகும் என்றனர். . அந்த நோயை போக்க மருந்து சொல்லி உள்ளார் அகத்தியர்

கிட்டிடா அரும்பொருள் தான் முப்பு உப்பு

கிட்டினா லுந்தனுக்கு நோயுந் தோற்கும்

அட்டிசெய்யு யெமனணுக மாட்டானப்பா……………………………………………………….

………………
கட்டிதிர ளரையாப்பு புரை புத்தெல்லாம்

கரைப்பது மிதுவு மல்லா லதினங்கேளே

அகத்தியர் கன்ம காண்டம் 300 பாடல்304
கொன்றுவிடும் மும்மூல வஷ்தின் பற்பம்

குணமதனை யறிந்தவரா ருலகிலில்லை

நன்றுநாலாயிரத்து நாணூற்றுநாற்பத் தெண்ணோய்

நாசமறுந் தீப்பூடு நகைத்த மார்க்கம்

அகத்தியர் கன்ம காண்டம் 300 பாடல்304
முப்பு உப்பு யென்ற அரும் பொருள் கிடைப்பது அறிது அது கிடைத்தால் கட்டிகள் அரையாப்பு . புரையோடி ஆராத புண், புற்ரு நோய்கள் ஆகிய்யவை குணமாகும் . நோயால் மரணமடய மாட்டார்கள் .
மும் மூலவஷ்தின் பஷ்பம் யென்ற தீப்பூடு யென்றமுப்பூ பஷ்பத்தில் செய்த மருந்துகளின் குணங்களை யாரும் அறீயமாட்டார்கள். 
மனிதருக்கு ஏற்படும் 4448 நோய்களையும் தீர்க்கும் .

மரணத்திற்கும் முக்திக்கும் இருக்கும் தொடர்பு பர்ற்றீயும் முக்த்தியின் வகைகள் பற்றீயும் சித்தர்கள்ளின் முக்தி கொள்கை பற்றியும் மரணமில்லா பெருவாழ்வு பெறுவது எப்படி? நிலைத்த பேரின்பம் எது ? முக்தியால் கிடைப்பது என்ன? முக்தியின் நிலைகள் எவை? என்பவைகளை

வரும் பதிவில் பார்ப்போம்.

கடவுள்  மனிதன் –  முக்தி

****************************
( சாகாபாதை தோற்றங்கழும கண்களும் 25 தத்துவங்களும்)
(பகுதி4)

*********
thanks for Raja Krishna Moorthy sir….
 மரணத்தையும் மரணத்தை கடப்பதையும் சென்ற பதிவில் பார்த்தோம் . மரணித்தபின் நடப்பது பற்றியும் , மரணாத்திற்கும் முக்த்திக்கும் இருக்கும் தொடர்பு பற்றியும் பார்ப்போம். ..
1 மரணம் மற்றும் முக்தி . பற்றிய கொள்கைகள்

*****************************************
1.1நாத்தீகர் கோட்பாடு

: கடவுள் என்று ஒன்று இல்லை . இயற்கை சக்தி மனிதனை உருவாக்கியது . மரணம் என்பது உடலை விட்டு உயிர் பிரிவது .

 மரணம் மனிதன் அடையும் கடைசி நிலை .. ஆன்மா மற்றும் முக்தி என்று இல்லை.
1.2 வேதாந்திகளின் கொள்கை / கர்மா கொள்கை

இறைவனால், ரிசிகள் முனிவர்கள் மூலம் சொல்லபட்டவை இந்திய வேதங்கள். ஆதியில் பலவிதமாக ஒரெ தொகுப்பாக இருந்த்து.

வேதங்கள் இறைவனால் சொல்லபட்டு ஆதிகிரந்தம் யென்ற மொழியில் எழுதப்பட்ட்து. இது உருவாகிய காலம் அறிய முடியாது. அக்காலத்தில் அரசர்கள் மனு யென்று பதவி பெற்றனர். 
அறத்தையும் நீதியையும் ஆன்மீகத்தையும் சொல்லும் அதிகாரம் வேத வியாசர்யென்ற பதவியை சர்ந்த்து .
இவ்விதம் 28 வது வேத வியாசராக பதவிஏற்றவர் க்ரிஷ்ணதுவைபாயனர் . இன்று வேதவியாசர் யென்று அறியபடுபவர் . இவர் தான் வேதங்களை ரிக், யஜூர் சாம அதர்வண யென்று நான்காக பிரித்தவர். புராணங்களை 18 ஆக தொகுத்தவர் . மகா பாரதம் எழுதி அதில் கீதை சொன்னவர்.. நாங்கு வேதங்களிளும் மந்திரம்(துதி) , ஆரன்யகம் ( வித்யை), உபனிசத் (இறைஞானம்) ஆகிய பகுதிகள் உண்டு. இவை சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டவைகள் நம்பிக்கையின் அடிப்படையில் அனுபவ வாயிலாக சொல்லபட்ட ஆன்மீக கருத்துகளை ஏற்று கொள்பவர்கள் வேதாந்திகள்.
வித்யையும் வாசி யோகமும்

வேதங்களிள் காயத்ரி வித்யை, சித்தவித்யை , புருஷவித்யை பஞ்ச அக்னி வித்யை ஆகியவை உள்பட சுமார் 35 வித்யைகள் உள்ளன .

பெரும்பாலானவைகள் மனிதன் முக்தி அடயும் வழிகளை சொல்கிண்றண. .
வித்யைகள் இறந்தபின் அடயும் நிளைகளையும் முக்தி பற்றி பேசுகின்றண. வாசி யோகம் இறப்பில்லா முக்தி பற்றி சொல்கிறது. வித்யைகள் தமிழ் சித்தர்களின் வாசி யோக பாதை இல்லை . சிலர் வித்யைகளையும் வாசி யோகத்தையும் குழப்பி தானும் கெட்டு பிறரையும் குழப்புகிறார்கள்.. இவர்கள் வித்யையின் பலனையும் வாசி யோக பலனையும் இழகிறார்கள்..
மரணத்துக்குப்பின் மனிதனின் நிலைகள் குறித்து பல கருத்துகள் வேதங்களிள் மற்றும் பிரம்ம சூத்திரத்தில் சொல்ல பட்டு உள்ளன. அவற்றை பார்ப்ப்போம்
மரணித்தபின் உடலைவிட்டு உயிர் (ஆண்மா) பிரிந்து ,அதனால் உடல் அழிதல் என்பது மரணத்தில் ஒரு நிகழ்வு . உடல்மட்டும் அழியும் ..
அதன் பின் ஜீவஆத்மா தனது முந்தய பதிவுகளுடன் வேற்று உலகம் செல்லும்.. மரணித்தபின் உடல் அற்ற மனிதன் தன் நல் விணை தீவிவினை பயனுக்கு ஏற்ப வ்ழிபடும் முறைக்கும் சாதனைக்கும் ஏற்ப பயனிக்க மூன்று பாதைகள் உண்டு.
வழிபடும் முறைகளை பார்ப்போம்

பக்தி மார்க்கத்தில் இறை வழிபாடு மூண்றாக பிரிக்க படுகிறது. .
 அதன் தன்மைக்கு ஏற்ப முக்தி நிலை மாறுபடுகிறது .
1.1 பிரதமை அல்லது உருவ அல்லது சகுனபிரம்ம வழிபாடு

இறைவனுக்கு சிவன் கனபதி முருகன் விஷ்ணூ சக்த்தி , மாதா யேசு யென்று உருவம் கொடுத்து வணங்குவது.
1.2 பிரதீக அல்லது குறியீடு வழிபாடு

லிங்கம், சூலம் . சாலி கிராமம் யெந்திரங்கள் , சிலுவை , காபா , பிறை ஆகியவற்றை வணங்கல்.
1.3 உருவம் நாமம் இல்லாத நிற்குண பிர்மத்தை வணங்கல். நிற்குண வழிபாடு செய்து முழுமைபெற்ற ஞானிகள் பரம்பொருளாகிய இறைவனை நேரடியாக சேருகிறார்கள்

பிரதமை அல்லது உருவ அல்லது சகுனபிரம்ம வழிபாடு,பிரதீக அல்லது குறியீடு வழிபாடு செய்பவர்களின் மரணத்திற்கு பின், ஆன்மா செல்லும் மூன்று பாதைகள்
!. ஒளி பாதை/சுக்கில கதி/தேவயனம்/ அர்ச்சிராதி மார்க்கம்

பிரதமை பிரதீக வழிபாடு செய்து ஆன்மீக சாதனை செய்து இறை அனுபூதி பெற்ற மஹான்கள் மற்றும் அறவழி வாழ்ந்தவர்கள் , இறந்தபின் அவர்களின் நாடி உச்சந்தலையை பிளந்து ஓளி பாதையை அடயும் . அங்கு ஆதிவஹிக தேவதைகள் அவர்களை அழைது கொண்டு ஒளி பாதை வழி யாக ,13 இடங்களை கடந்து இறைவன் வாழும் ப்ரம்ம லோகம் அடைவார்கள் .
அவர்கள் செல்லும் பாதைகள்

ஒளி(அர்ச்சி ).__பகல்(அஹ)__சுக்லபட்சம்__ உத்ராயணம்__ வருடம்(ஸம்வத்சர

ம்)…தேவலோகம்__வாயுலோகம்__சூர

ியன்__சந்திரன்__

மின்னல்__(வித்யுத்)__வருண்ண்__ இந்திர லோகம்__பிரஜாபதிலோகம்__ பிரம்ம லோகம் . ஆகியவை . ஒளி பாதையில் செல்பவர் அடயும் இடம் பற்றி பிரம்ம ஸூத்திரம் சொல்கிறது.
. கார்யம் பாதரி: அஸ்யகதி:உபபத்தே….. பிரம்ம சூத்திரத்திரம் 4:3.7

இறை அனுபூதி பெற்ற மஹான்கள் இப்பாதைகளை கடந்து அவர்கள் வணங்கிய இறைவனின் உலகை (கைலாயம் , வைகுண்டம் ஸ்ரீபுரம், பரமண்டலம் , சுவனம்) அடைவார்கள். இந்த முக்த்தி பக்க்தி யோகம் செய்பவர்களுக்கு.

பொருந்தும் . இதன்படி சிவபக்த்தன் கைலாயம் செல்வார் வைணவ்ர் வைகுண்டம் செல்வார் கிறிஸ்தவர்கள் பரமண்டலம் செல்வார்கள் இஸ்லாமியர் சுவனம் செல்வார்கள்.
ஒளி பாதையில் செல்பவர் மீண்டும் பிறப்பதில்லை . இவர்கள் செய்த தவத்திற்கு ஏற்ப மஹா லோகம் ..ஜனலோகம்… தபலோகம்…, சத்ய லோகம் ஆகி இடங்களுக்கு செல்வார்கள். அங்கு அவர்கள் தவம் சித்தி பெற்று பிரம்ம லோகம் அடைவார்கள்.
பிரம்ம லோகம் (இஷ்ட தேவதை சன்னித்யம்)அடைந்தவர் முக்தி பெறுகிறர். இதை “ முக்த்:ப்ரதிஜ்க்ஞானாத்” யென்கிறது பிரம்ம சூத்திரம் 4::4.2 இது சாலோகம் என்ற பெயர் பெறும் . அவர்களின் தவ வலிமைக்கு எற்ப இறைவனின் அருகே இருப்பார்கள் . இது சாமீப முக்தி யாகும் .பக்த்தர்கள் அடயும் முக்தி இவைகள். .
நிற்குண வழிபாடு செய்து முழுமைபெற்ற ஞானிகள் உடம்பை விட்டபிறகு பரம்பொருளாகிய இறைவனை நேரடியாக சேருகிறார்கள் . “இஷ்ட தேவதையின் எல்லா குணங்களையும் பெற்று அனுபவிக்கிறார்கள் யெனது நிலை அடைந்தவர் படைப்பின் போது பிறப்பதில்லை பிரலளய காலத்தில?் அழிவதில்லை”.(கீதை 14:2 )

இதை சாரூபம் முக்க்தி யென்பார்கள். ஆத்வைதிகள் இதை சாயுச்யம் யென்பார்கள்
2 புகை பாதை /கிருஷ்ணகதி /பித்ருயானம் மற்றும் மறு பிறவி

மரணத்திற்கு பின் புகை பாதை வழிசெல்லும் சாதாரண சராசரி மனிதர்கள்

மனிதன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மோட்சம் அல்லது நரகம் செல்வார்கள். புகை பாதை மூண்று உலகங்கள் வழி செல்லும். . அவைகள்

பிதுர்லோகம் சொர்க்கலோகம், நரக லோகம்/

எமலோகம் .. மரணித்தவர் முதலில் செல்வது பிதுர் லோகம். மரனித்தவர்களின் வாரிசுகள் பிதுர்கர்ம்ம் செய்தால் அந்த ஆன்மா சொர்கம் செல்லும் .

இதற்கு அமாவாசை தர்பனம் செய்வார்கலள் . புனித தீர்த்தங்களிள் திதி கொடுப்பார்கள்

சில ஆன்மாகள் சிலகாலம் நரகில் இருந்த பின் மோட்சம் செல்வார்கள் அங்கு அவர்களின் பாவ புண்ணியம் கழிந்தபின் மீண்டும் உடல் எடுத்து பிறப்பார்கள் . மறு பிறவியில் அவர் அவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப புழு முதல் ஞானிவரை பிறப்பார்கள் ..
இவ்விதம் பல பிறவி எடுத்து ஞானம் பெற்று ஒளிபாதை வழியாக பரமாத்மாவிடம் செல்லுவார்கள் .
. அகால மரணம் அடைந்தோர் பேய் பிசாசாக தனது ஆயுள் முடியும்மட்டும் .அல்லது தனது எண்ணங்கள் நிறைவு பெறும் காலம் வரை . இருப்பார்கள்.

அதன்பின் சுவர்க்கம் அல்லது நரகம் செல்வார்கள் . . புகை பாதையில் செல்பவர்கள் மீண்டும் பிறப்பார்கள். பல பிறவிகள் எடுத்து நற் செயல் செய்து ஞானம் பெற்று ஒளி பாதை யில் சென்று முத்தி பெறுவார்கள்.
3. அதோ கதி/ இருள் பாதை/ கீழ்பாதை:
பாவிகள் கொடுமைகாரர்கள் , தீயவர்கள் செல்லும் பாதை இருள் பாதை. இவர்கள் நேரெ நரகம்/ எமலோகம் செல்வார்கள் நரகலோகத்தில் ஏழு நரகங்கள் உண்டு .அவைகள் ரௌரம்.மஹாரௌரம் வஹ்னி,வைதரனி கும்பீபாகம்,தாமசம், தீர்க தாமசம் ஆகியவைகள் சிறிய சித்ரவதையில் இருந்து கடுமை அதிகரிக்கும் .

இடங்க்கள் இவைகள். பாவத்தின் தன்மைக்கு எரற்ப பாவிகள் தண்டிக்க படுவார்கள்

. இதற்கு எமன் தலைவன்.
ஒருவரின் பாவ புண்ணிய கணக்கு பதியப்பட்டு உள்ளது. . இதர்க்கு சித்திர குப்தர் தலைவர் . ஒருவர் எந்தநரகம் செல்வது எவ்வளவு காலம் தண்டணை யென்பதை பாவத்திற்கு எற்ப நிர்ணயம் செய்வார். பாவிகளை கொண்டு செல்ல எமதூதர்கள் வருவார்கள். 
அதோ கதியில் செல்பவர்கள் மீண்டும் பிறப்பார்கள். பல பிறவிகள் எடுத்து நற் செயல் செய்து ஞானம் பெற்று ஒளி பாதை யில் சென்று முத்தி பெறுவார்கள்.

இவை இந்து வேதாந்திகள் கருத்து. இது கர்மா கொள்கை..

கிறிஸ்தவ கொலள்கை .
1 3 மரணம் என்பது பெரும் தூக்கம் .மறுபிறவி இல்லை சுவர்க்கம் நரகம் உண்டு.

கடவுள் வேறு மனிதன் வேறு .

கடவுள் மனிதனை தன சாயலாக படைத்தான் . மனிதனின் மரணம் என்பது பெரும் நித்திரை போன்றது .. உலகம அழியும்போது அனைவரும் மீண்டும் உயிர் தெழுவார்கள் . அதன்பின் அவர் அவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏறப சொர்கத்திற்கோ நரகத்திற்கோ செல்வார்கள் . எனவே இறந்தபின் உடலை பேழையில் வைத்து புதைப்பார்கள் இறைவனுக்கு எதிராக சாத்தான் என்ற சக்தி உண்டு .. . அகால மரணமடைந்தோர் சாத்தானின் பிடியில் சிக்கி சுவர்க்கம் நரகம் செல்லாமல் பேய் பிசாசாக இருப்பார்கள் அதன் பின் பெரும் நித்திரைக்கு செல்வார்கள் .. தங்கள் மதத்தில் சொன்ன கடவுளைமட்டும் வணங்கி புண்ணியம் செய்து ( பரலோகம்/சுவனம்/

சொர்க்கம்) செல்வது மனிதனின் பிறவி குறிக்கோள் … பாவிகள் நரகம் செல்வார்கள். பாவம் செய்தவர்கள் சொர்கம் செல்ல உயிர் உள்ள போது பாவ மன்னிப்பு பெற வெண்டும் . கிறிஸ்தவ மத்த்தைசர்ந்தவர்கள் மட்டுமே சொர்கம் செல்வார்கள் யென்கிறது கிறிஸ்தவமதம். இந்த மத்த்தில் நம்பிக்கை உள்ளவர்கள் சிலர் சொர்க்க நரக கோட்பாட்டை நம்புவதில்லை .
அத்தகையோரை மறைந்து வாழும் நாத்திகர்கள் என்று சொல்லுவதுண்டு , நாம் அனைவரும அன்னை என்று அன்புடன் அழைக்கும் செயின்ட் தெரேசா இத்தகைய கிரிப்டிக் அத்தீஸ்டாக அவர் சார்ந்த மதத்தினரால் மேலை நாட்டில் கருதப் பட்டார்.. கிறிஸ்தவ மத்த்தைசர்ந்தவர்கள் மட்டுமே சொர்கம் செல்வார்கள் யென்கிறது கிறிஸ்தவ மதம்.
இஸ்லாமியர் கொள்கை இது போன்றதே. இஸ்லாம் மத்த்தைசர்ந்தவர்கள் மட்டுமே சொர்கம் செல்வார்கள் யென்கிறது இஸ்லாம் மதம். இவர்கள் முத்தி சாலோகம் போன்றது.. இவைகள் ஏறக்குறய கர்மா கொள்கையில் ஒரு பகுதியாக உள்ளது .

கடவுள்  மனிதன் – முக்தி

**************************
( சாகாபாதை தோற்றங்கழும கண்களும் 25 தத்துவங்களும்)
(பகுதி5)

*********
thanks for Raja Krishna Moorthy sir….
 தீர்க்க தரிசிகளும் ,ஞானிகளும் யோகிகளும் , யோகபாதையில் இருப்பவர்களும் , பக்தர்களும் ;:இறைவனின் ரூபங்களை , சித்தர்களை , குருமார்களை , மகான்களை, தன்னுள் தரிசிக்கிறார்கள். சிலர் சில நிகழ்வுகளை தன்னுள் பார்கிறார்கள். எனது முக நூல் நண்பர் Lakshmi Rajan சிவவாக்கியரை தரிசித்ததாக தெரிவித்தார். இன்றும் வீட்டில் வாசி யோகம் பாடங்களை படித்து, யோகா பழகும் அன்பர்கள் பலர் பல தரிசன்களையும் , ஓசையையும் கேட்டதாக சொல்லி வருகிறார்கள் . இவை உண்மையா சாத்தியமா? சாத்தியம் என்றால் எவ்விதம் ?
இத்தகைய தோற்றங்களை மனதிரிபு( Hallucination மன நோய் ) அல்லது பைத்தியம் என்று ஓஷோ சொல்வது சரியா ?

ஓஷோ சொல்வது உண்மை என்றால் மரணிக்கும பாதை எது ? மரணமில்லா பாதை எது?
halusination . அன்பர் Mathi vaanan அவர்கள் ஓஷோவின் கருத்தை பதிவு செய்துள்ளார் .
“ கேள்வி : ஓஷோ , என் நண்பன் ஒருவன் ‘ கிருஷ்ணன் புல்லாங்குழல் ஊதுவதைக் காணுகிறேன் ‘ என்று சொல்லுகிறான் . இது சாத்தியமா ?
புல்லாங்குழல் ஊதுவதைக் காணுகிறேன் ‘ என்று சொல்லுகிறான் . இது சாத்தியமா ?
#பதில் : ” ஆமாம் – என்னிடமேகூட பலபேர் வந்து , ‘ கிருஷ்ணன் ‘ புல்லாங்குழல் ஊதுவதைக் கண்டேன் . ‘ ஜீசஸை சிலுவையில் அறைவது என் கண்முன்னே வந்தது . புத்தர் அமைதியாக உட்கார்ந்திருப்பதைக் கண்டேன் ” என்று கூறுவார்கள் .
 இதைக்கேட்டு நான் , ‘ நீங்கள் உண்மையாக ஆன்மீகத்தில் முன்னேறிவிட்டீர்கள் ‘ என்று கூறுவேன் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் . இது கனவில் அல்ல ; விழித்திருக்கும்பொழுதே , இந்தக் காட்சிகள் அவர்களுக்கு நேர்ந்திருக்கிறது !
கடவுள் உருவங்கள் மற்றும் ஓவியங்கள் எல்லாம் சில புத்திசாலிகளின் கற்பனை வடிவங்கள் . உங்கள் மனதை எப்படி நிலைநிறுத்துவது ? ஒருவன் ஒரு ஓவியத்திலேயோ அல்லது சிலை உருவத்திலேயோ , இல்லை தானே ஒரு கற்பனை உருவத்தை உண்டாக்கி , அதிலேயே மனதை செலுத்தும்பொழுது , அந்த உருவம் அவன் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது –

 இராமகிருஷ்ணருக்கு காளி உருவம் எப்படிப் பதிந்தது , அப்படியே .
இப்படி மனதில் பதிந்த உருவம் பிரக்ஞையற்ற நிலையில் நீங்கள் தூங்கும்பொழுது , பல கனவாக வெளிப்படும் . அப்பொழுது நீங்கள் அதி விதீவிரமாகி அதை தியானமாக்கிடுவீர்கள் . பிறகு விழித்திருக்கும்பொழுது , பிரக்ஞை நிலையில் அது தோன்றும் ஏன்பேசகூட செய்யும் இது 

.மனவியாதி(Hallucination ) . இப்பொழுது நீங்கள் அந்த உருவத்தோடு ஒருவித பைத்திய நிலையில் இருக்கிறீர்கள் ! ஆனால் இது ஒரு சாத்வீக பைத்தியம் .
 பிறருக்கு எந்தக் கெடுதலும் கிடையாது – அவர்கள் அவற்றை உங்கள் மண்டைக்குள் திணிக்காத வரையில் !” “. பழக்கத்தாலேயே உங்களைக் கொன்றுவிடும் ! இவையெல்லாம் உண்மையான ஆன்மீகமாகாது . உண்மையான ஆன்மீகம் உங்கள் தியானத்தில்தான் இருக்கிறது”

ஓஷோவின் இந்தகருத்து மேலை நாட்டு மனவியலார் சிக்மன்ட் பிராய்ட அவர்களின் மனபகுப்பாய்வு கொள்கை (psycho analysis). சார்ந்தது. 
பைத்தியகாரன் காணும் காட்சியையும் (Hallucination) நல்ல மனநிலையில்ஞானியர் காணும் காட்சியையும் இந்த கொள்கையால் பிரித்துபார்க்க முடியவில்லை. காரணம் இந்த மனபகுப்பாய்வு கொள்கை மனிதனில் இருந்து மனதை மட்டும் தனியே பிரித்து ஆய்வு செய்கிறது . மேலும் துரியம் மற்றும் துரியாதீதம் போன்ற அதீத சக்திதரும் மனதின் உயர்நிலை பற்றி அல்லது காமா அலை வரிசை பற்றி சிக்மன்ட் பிராய்ட பேசவில்லை .
தவநிலை தோற்றங்களுக்கும் மற்றும் மனநிலை திரிபு தோற்றங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் ஓஷோ விற்கு தெரியவில்லை. .தியானம் என்பதன் உண்மை தன்மை புரியாமல் தியானம் செய்ய சொல்கிறார் . 
தியானம் என்பதின் உண்மை தன்மையை வீட்டில் வாசியோகம் பாடத்தில் தெளிவாக சொல்லி உள்ளேன் siddharyogam.com சென்று படியுங்கள்

. ரிஷிகள் மற்றம் சித்தர்களின் அறிவியல் கொள்கை அறியாததாலும் சிக்மன்ட் பிராய்டடின் முழுமை பெறாத தத்துவத்தை பின்பற்றி ஓஷோ , தவறான முடிவுக்கு வந்துளlளார். இது அறியாமையின் வெளிப்பாடு . இவற்றை பகுப்பாய்வு செய்வோம் 
சித்தர்களின் அறிவியல் மனம் பற்றி சொல்வதை பார்ப்போம்
“தன்னைத்தான் தான் அறிந்து? பார்க்கும் போது

தத்துவமாய் நின்றதொரு தொன்னூற்று ஆறு “

ரோமரிஷி பரிபாசை 500 பாடல் 38
தான் என்பதை ஆராய்ந்து பார்த்தால் நான் என்ற மனிதன்96 தத்துவங்களால் ஆனவன் . மனிதன் தாய் வயிற்றில் கருவாக வளரும்போது சிறிது சிறிதாய் இந்த தத்துவங்கள் உருவாகிக்கொண்டே வரும் .
இதுவே கரு வளர்ச்சி . கருவில் தத்துவங்கள் 96 உருவானபின் நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் இந்த தத்துவங்களில் மனம் ஒரு தத்துவம் ..
மனம் என்னும் தத்துவம் பிற தத்துவங்களை சார்ந்து இயங்குவது என்கிறது .சித்தர் அறிவியல். அதாவது மனதை பிற தத்துவங்களில் இருந்து பிரிக்க முடியாது . . பிற தத்துவங்களோடு இணைந்து ஒட்டுமொத்தமாக இயங்கும் இயக்கமாக (Holistic psyco analysis ) மனம் இயங்குகிறது..

. நாம் காணும் தோற்றங்களின் உண்மை தன்மை
காட்சி அல்லது நிகழ்வுகளை காண 96 தத்துவங்களுள் முக்கியமாக 25 தத்துவங்கள் ஒருங்கிணைந்து செயல் பட வேண்டும் . அவைகள் பொறிகள் ஐந்து , புலன்கள் ஐந்து , கோசங்கள் ஐந்து, அவத்தைகள் ஐந்து ,மனதின் தொகுப்பான அந்தகரனங்கள் நான்கு மற்றும் அறிவு ஒன்று உள்பட இருபத்து ஐந்து தத்துவங்களை அறியவேண்டும்..
. இந்த 25 தத்துவங்கள் , ஐந்துவகைகளில் தோற்றங்கள் மற்றும் நிகழ்வுகளை தெருவிக்கின்றன

நாம் காணும் ஐந்துவகை தோற்றங்களை

1. நினைவு நிலையில், நிஜத்தில் நம்முன் உருவங்கள்மற்றும் நிகழ்வுகள் தோன்றுவது . புரககண்களால் அல்லது விழிகளால் காண்பது. இவ்விதம் காண்பது ;நமது புரக்கண்னின், பார்க்கும் தன்மை , சூழ்நிலை, தூரத்தை சார்ந்து நிகழ்வது மற்றும் மூளையின் ஒருங்கிணைப்பு தன்மையை சார்ந்தது ..
2. நினைவு நிலையில் கண்கள் மூடிய போது நமக்குள் மனதில் தோன்றுவது மூளையால,் உணரபடுவது .
3.கனவுநிலையில் பார்ப்பது மற்றும் நிகழ்வது
4..தவநிலையில் காண்பது அல்லாது யோக நிலையில் தோன்றுவது( பிரத்தியாகாரம் , தாரணை ,துரியம் மற்றும் துரிய அதீதம் )
5.மனநிலை திரிபு அல்லது பைததியநிலை( Hallucination / Illusion) நிலையில் தோன்றுவது

இவற்றை புரிந்து கொள்வதற்கு முன் நாம் காண்பதில் செயல்படும் நிகழ்வுகளை படிப்படியாக அறியவேண்டும். இதற்ககு முதலில் 25 தத்துவங்களை அறிவோம் . .
காண பயன்படும் தத்துவங்கள்25

பொறி ஐந்து

கண் , மூக்கு , செவி , நாக்கு தோல்

புலன் ஐந்து

ஐந்து பொறிகளின் செயல்கள்தான் புலன்கள் . அவை காணல்,நுகர்தல் கேட்டல் ,ருசித்தல் , உணரல் ..

நம்மை சுற்றியுள்ள பொருள்கள் உயிர்கள் ஆகியவற்றின் தன்மைகளை அதன் நிகழ்வுகளை ஐம் புலன்களால் அறிகிறோம் .? 
இந்த அனுபவங்களின் இன்பநிலை துயர்நிலை ஆகியவற்ரின் தொகுப்பு மனம் . மனதிற்கு உணர்வுகள் உண்டு ..
கோசங்கள் ஐந்து

******************
. .நம்உள் ஒன்றிற்குள் ஒன்றாக அடங்கி உள்ள அடுக்குகள் கோசங்கள் .நம்முள் ஐந்து? கோசங்கள் உண்டு. . நாம் காணும்மனிதன் இந்த ஐந்து அடுக்குகளால் ஆனவன்.
1. அன்னமயகோஷம்:: நமது உணவால் பிரபஞ்ச பொருட்களால் உண்டான பருஉடல் .நமது கண், மூக்கு செவி மற்றும் அவயவங்கள் அடங்கியது. இதனுள் பிற அடுக்குகள் அல்லது கோசங்கள் செயல் படுகின்றன ..
2.பிராண மய கோஷம் : பருஉடலை இயக்கம் செய்யும் காற்று , நீர் , வெப்பம் , திடம், மின்சாரம் , காந்தம் போன்ற சக்தி ஓட்டங்கள் .பருஉடலில் உள்ளே உள்ளது
3. மனோமயகோசம் . மனதின் தொகுப்பான , மனம் புத்தி , சித்தம் அகங்காரம் ஆகியநான்கும் அந்த காரணங்கள் எனப்படும் .இவற்றை இயக்கம் செய்யும் அறிவு ஆகியவை நுன்னுடல்லில் உள்ளது . இந்த ஐந்தின் தொகுப்பே மனோமய கோசம் . ஆக நாம் சாதாரணமாக குறிப்பிடும் மனம் என்பது நுண் உடலில் செயல்படும் மனோமயகோசம் .
3 .1 .மனம் :கண். காது, நாக்கு ,மூக்கு தோல் ஆகியவற்றால் பார்த்தல் கேட்டல் , ருசி, உணர்வு ஆகிய 10 தத்துவங்களின?் அனுபவங்களின் தொகுப்பு மனம் . இதற்க்கு இன்பம் துன்பம் ஆகிய உணர்வுகள் உண்டு .செயலின் தொடக்கம் மனம் . மனோமய கோசத்தின் மூலமே அனைத்து காட்சிகளும் அறியப்படுகிறது . கரு உருவாகும்போது தத்துவங்கள் உருவாகின்றன . எனவே கருவில் மனம் உருவாகிறது . சுழிமுனை வாசல் திறந்தாள் மனம் ஒடுங்கும் .
3.2 புத்தி : ஒரு செயலின் இன்பம் துன்பம் ஆகிய உணர்வை இணைக்காமல் நன்மை தீமையை , பிரித்து பார்ப்பது
3.3 சித்தம் : செயலில்உள்ள இன்பம் துன்பம் நான்மை தீமை ஆகியவற்றை ஆராய்ந்து செயலின்ன் வடிவத்தை தீர்மானம் செய்து செய்வதா வேண்டாமா என முடிவு செய்வது . பலநேரங்களில் புத்தியும் மனமும் ஒரே நிலைபாட்டை எடுக்க முடியாமல் இருக்கும் ஆகையால் மனம் என்ற கோசம் குழப்பமடையும் . இதுவே நாம் குழப்பமடைவதன் காரணம் . ஒருசர்கரை நோயாளி , விருந்தில் பரிமாறப்படும் இனிப்பாய் உண்ணலாமா வேண்டாமா என்ற நிலை . இனிப்பின் சுவை இன்பாம் கருதி மனம் உன்ன சொல்லும் . இனிப்பிலவரும் நோய் கருதி புத்தி உண்ணக்கூடாது என்றுமுடிவு செய்யும் . . இந்த குழப்பம் தான் சித்த தடுமாற்றம் . . சூழ்நிலைக்கு ஏற்ப சித்தம் முடிவு செய்ததும் , அதை அகங்காரம் செயல் படுத்தும் .
3.4 அகங்காரம் : செயலை செய்ய வைப்பது

அறிவு: அனைத்து தத்துவங்களையும் ஒருங்கிணைத்து மனிதன் உயர்நிலை அடைய செயல்படுவது
4. விஞ்ஞான மய கோஷம் :. நாம் அறிந்தவற்றில் இருந்து அறியாததை அறியசெயும் தன்மை நுண அறிவு தன்மை . . நுன்னுடல்லில் உள்ளது
5..ஆனந்தமயகோசம் : நம்முள் இருக்கும் இன்பமயமான இறை தன்மை . இது காரண தேகத்தில் உள்ளது .இதை நம்முள் அறிந்து உணர்தல் பேரின்பம் . அதுவே மோட்சம்
அவத்தைகள் என்ற உணர்வு நிலைகள் ஐந்து

நமது உணர்வின் நிலைகள் ஐந்து விதமாக உள்ளன . இவை அவத்தைகள் என பெயர் கொண்டவை .இந்த அவத்தைகள் மனோமய கோஷத்தால் உணரப்படும்
1.ஜாக்கிரத அவஸ்தா சுய உணர்வு நிலை / வழிப்பு உணர்வு நிலை . உடலும் மனமும் விழிப்பு நிலையில் பிரங்கையாக இருக்கும் உணர்வு நிலை . மனம் விழித்து இருக்கும் . அறிவின் படி உடல் இயங்கும் புர உலக நிகழ்வுகள் பதியப்படும் அதன்படி தோற்றங்கள் ஊனக்கண்ணால் அல்லது பரு உடல் கண்ணால் பார்க்கப்படும் .
பருஉடலில் நிகழ்வது . சில புள்ளி களை கோடுபோன்று பார்ப்பதும இதில் அடங்கும் . மனம் , புத்தி சித்தம் , அகங்காரம் அறிவு ஆகியவை செயல் படும் .நாம் ஒரு கோபுரத்தை கண்கள் விழித்த நிலையில் பார்க்கிறோம் .
இது நிஜம் . அதன் பின் கண்களை மூடிக்கொண்டு அந்த கோபுரத்தை நம்முள் பார்க்கிறோம் . அது மனக்கண்ணால் வழிபபு நிலையில் மனதில் பதியப்பட்டு பின்பு கண்கள் மூடிய நிலையில் மீட்டு எடுக்கப்படுவது . . Betawave
2., சொப்பனா அவஸ்தா அல்லது கனவு உணர்வு நிலை

;. பரு உடல் தூக்க நிலையில் இருக்கும் போது ஏற்படும் ..மனம் விழித்து இருக்கும் . மனதின் பதிவுகளில் இருந்து தோற்றங்கள் வெளிப்படும் . ஆனால் பரு உடல் செயல் படாது மனதின் உணர்வு மட்டும் செயல் படும். .? பிராணமயகோசம் செயல் படும் . 
மனோமய கோசத்தில் மனம் மட்டும் செயல் படும். புத்தி , சித்தம், அகங்காரம், அறிவு செயல் படாது .

நாம் தூங்கும் போது விழிப்பு நிலையில் பார்த்த அந்த கோபுரத்தை பார்க்கிறோம் . இது கனவு . நிழல் ஆனால் நிஜம் இல்லை . .சூட்சம தேகத்தில் மனக்கண் என்ற சூட்சம தேககண்ணால் காட்சிகள் காணப்படும் . இதன் பார்வை தன்மை புரக்கண்ணுக்கு அப்பாற்பட்டது
3. சுழுத்தி: உணர்வு அற்ற தூக்க நிலை

:ஆழ்ந்த தூக்க நிலையில் ஏற்ப்படும் . மனோமய கோசத்தில் ஏற்ப்படும் . அந்த கரணங்களான மனதின் உணர்வுகள் , புத்தி சித்தம், அகங்காரம் செயல் படாது . சூட்சமதேகம் செயல் படும்.பிராணமய கோசம் செயல் படும் . விஞ்ஞானமயகோசம் மற்றும் ஆனந்தமய கோசம் செயல் படாது . காரண தேகம் இயங்கும். பரு உடல் பலப்படும் .. எந்த கண்ணும் இயங்காது .இந்தநிலை சிறிதுநேரம அதாவது 15 நிமிடம் இருக்கும் . இந்த நிலையில் இருந்து மனம் பிற நிலைக்கு தானாக வந்துவிடும் .. நாம் பார்த்த கோபுரமோ அல்லது வேறு ஒன்றும் பார்க்கமுடியாது . நாம் இருந்தோம் என்பது உண்மை ஆனால் அதை உணரமுடியாது . விழித்தபின்பு தூங்கினோம் என்று அறிவோம் . .பருவுடல் பிரபஞ்ச சக்தியை பெறும். மயக்கம் போன்றது
. ஆனால் மயக்கம் நோய்த்தன்மையானத

ு மற்றும் உடல் பிரபஞ்ச சக்தியை பெறாது . பருவுடல் சக்தி பெறாது மாறாக பலம் இழக்கும்.பருஉடலின் செயல்கள் ஆரோக்கியம் அற்று இருக்கும்.. .Delta wave
4.துரிய உணர்வு நிலை

: தவம் அல்லது அஷ்டாங்க யோகம செய்யும் போது பிரத்தியாகாரம் , தாரணை, தியானம் ஆகிய நிலைகளில் தோற்றங்கள் ஏற்படும் .
 தியானத்தில் கோபுரத்தை பார்க்கிறோம் . அதன் உள்ளே சூட்சம வடிவில் இருக்கும் தெய்வம் நமக்கு காட்சி தருகிறது . அல்லது சித்தர் காட்சி தருகிறார்.இந்த நிலையில் பரு உடல் செயல் படாது . அந்தகரனங்களில் மனம் புத்தி சித்தம் அகங்காரம் அறிவு செயல் படும் ஐந்து கோசங்களும் செயல் படும் . விழிப்பு நிலை இருக்கும் . குறிப்பாக துரிய தியான நிலையில் சித்தர்களுடன் பேசமுடியும் .சூட்சமதேகம் மற்றும் காரண தேகம் செயல் படும் . . ஞானக்கண்ணால் பார்க்கப்படும் .. இது உண்மை .
 கனவு இல்லை . . துரியநிலையில் இருந்து ஜாக்கிரத நிலைக்கு வந்துவிடலாம் . நாம் காண்பது மீண்டும் நினைவுக்குவரும் . சொல்லமுடியும் . சிருங்கேரி சங்கரா ஆச்சாரியார் தேவியை தரிசித்து அவளின் பாதங்களை தொட்டு உணர்ந்ததாக தெரிவித்து உள்ளார் சிவபெருமான் நுட்பமான ஆசனங்களை சிருங்கேரி சங்கரா ஆச்சாரியார் அவர்களுக்கு சொல்லி கொடுத்தார் என்றும் சொல்கிறார் .இதுவே துரியநிலை.இதை அதீத உணர்வு நிலை அல்லது காமா நிலை என்று இப்போது அறிவியலார் சொல்கிறார்கள் . இதை Electro Encephalo Gram கருவியுடன் ஆய்வுசெய்து உறுதி செய்துள்ளார்கள் .
5 துரிய அதீதம் .

: இந்த நிலை விவரிக்கமுடியாதது . ஆனந்த மய கோசத்தில் காரண தேகம் மட்டும் இயங்குவது . நிற்விகல்ப சமாதி இந்த நிலையில் கை கூடும் . திரு மூலரும் பிற சித்தர்களும் இந்தநிலையை உணர்ந்து பார் என்று சொல்கிறார்கள் . இது இறைவனோடு ஒன்றிய நிலை . சமாதி பற்றி அறிய சித்தர்யோகம்.காம் வலைதளத்தில் யோகாபழகு பகுதி சென்று பார்க்க வேண்டுகிறேன். துரிய அதீதம் நிலையை தொட்டவிதத்தை சுபரமன்யர் சொல்கிறார் . இந்த நிலையில் 9 6 தத்துவங்களும் செயல்படாது .ஆதாரம் ஆறும் ஒன்றாகி அக்கினிதம்பம் என்ற நெருப்பாறு உருவாகும் . இது மயிர்பாலம் என்ற புருவமத்தியை தாண்டும் . பரவெளியில் சேரும் .. அதன்பின் துரிய அதீதம் ஏற்படும் .
துரியாதீத நிலையில்பரவெளியில் இறைவனை காண்டு அவனுடன் ஒன்றமுடியும் Electro Encephala Gram . இது மௌன யோகம் எனப்படும்
இந்தநிலையில் கருநெல்லிமரம் ( சூரியகலையில் ) , வெண்சாரை (சந்த்ரகலையில் ) சுணங்க விருட்சம் (அக்கினிகலையில் ) சூரியகலையும் அக்கினிகளையும் (12 =௪ = 16 ) சந்ரகலையில்(+16) சேரும் இம்மூன்றும் சேர்ந்தது ஜோதி விருட்சம் உருவாகும் .. இதுவே பராபரன் என்ற இறைவன் அவன் தருவது கணை எருமைப்பால் என்ற அமிர்தம் இந்த நிலையில் தத்துவங்கள் 96 றும் கடந்து இந்த மவுன யோக காட்சியை தினம் தினம் பார் என்கிறார் சுபரமன்யர் .. 
அப்பொழுது நீயே இறைவனாக இருக்க காண்பாய்

தொட்டகுறை சொல்லுகிறேன் துரியாதீதம்

துலங்குமட வன்னியும்தான் அதன்மேல்நிற்கும்

வட்டமிட்ட சூரியன்தான் தனளில்சென்று

வட்டவரை னுசசியினில் மாரிப்பாயும் .
திட்டமுடன் அக்கினியும் பிர்மவீடில்

சிறந்துமிக சேர்ந்திடவே அமிர்தமாகும் .

சுபரமன்யர் ஞானம் 20 பாடல் 17
ஆச்சடா கருநெல்லி மரமீதாச்சு?

அப்பனே வெண்சாரை சநரநாமம்

மூச்சடா அக்னியே சுனங்கனாகி?

முழுதுமடா கனைஎருமை பாலுண்டாச்சே

நீச்சடா விருச்சம்தான் சோதி என்றால்

நிலையான பராபரமே சோதிசோதி

வாச்சடா இம்மென்ற மௌனம் தன்னை

தினம் தினம் நீ காணு கானே

சுபரமன்யர் ஞானம் 20 பாடல் 20
“ தானவனு மாகிநின்றாலப்பா சொல்வேன்

தத்துவம் தொண்ணுற்றாறு . தாண்டியோடும்”

சுபரமன்யர் ஞானம்12 பாடல்10
தூக்கம் என்பது யாது .?

மனிதன் பிரபஞ்சத்திலிருந்து சக்தியை பெற்று அதனுடன் தான் உண்ட உணவினில் இருந்து சக்தியை பெற்று . 96
 தத்துவங்களை இயங்கசெய்து வாழ்கிறான் . தத்துவங்களை இயங்கசெய்வதால் தினமும் சக்தி விரயமாகிறது . இந்த விரயமான சக்தியால் களைப்பு அடைகிறான் . . விரயமான சக்தியை மீட்டு எடுக்க சுழுத்தி நிலைக்கு சென்று சக்தியை மீட்டு எடுக்கிறான் . இப்படி சக்தியை மீட்டு எடுக்க ஜாக்ரத அவஸ்தை நிலையில் இயங்கிய 96 தத்துவங்களில் பலவற்றை இயங்க செய்யாமல் நினைவு குறைந்து அல்லது விழிப்பு நிலை குறைந்து சொப்பனா அவஸ்தை சென்றுஅங்கும் பல தத்துவங்களை இயக்காமல் சுழுத்தி அவஸ்தை செல்லும் தன்மையை தூக்கம் என்கிறோம் .
சுழுத்தியில் சக்தி பெற்றபின் ஜாக்ரத அவஸ்தைக்கு திரும்பி மீண்டும் 96 தத்துவங்களை இயக்க செய்வது விழிப்பு . 
இவ்விதம் தூங்கி போவது நித்ய பிரளயம் . பின்பு சக்தி பெற்று விழித்து எழுவது நித்ய ஸ்ருஸ்டி என்கிறது விஷ்ணு புராணம் .

இயற்கை மரணம் .என்பது என்ன ?

இவ்விதம் தினம் தூங்கி விழிக்கிறோம் இவ்விதம் தூக்கத்தில் சக்தியை திரும்பபெறும்போது 30 வயதுக்குமேல் உள்ளவர்கள் இழந்த சக்தியைவிட குறைவான சக்தியே பெறுகிறோம் .வயது செல்ல செல்ல இதனால் தத்துவங்கள் போதிய சக்தி பெறாமல் செயல் திறன் இழக்கிறது . இதனால் கேட்கும் தன்மை , பார்க்கும் தன்மை சிந்திக்கும் தன்மை அற்று நரை திரை

மூப்பு

அடைகிறோம். . நாட்கள் செல்ல செல்ல உடல் சுளுத்திநிலை செல்ல முடியாமல் . சக்தியை மீட்கும் தன்மையை இழந்து விடுகிறது . அப்போது தத்துவங்கள் 96றும் செயல் படாமல் சிதைந்து போகிறது . இதுவே மரணம்
மரணிக்கும் மனிதன் பாதை

. ஜாக்கிரதா அவத்தை என்ற சுயநினைவு நிலை என்ற விழிப்பு நிலையில் இருந்து கனவுநிலை மற்றும் சுழுத்தி நிலைக்கு தினம் தினம் சென்று தூங்கி மீண்டும் விழிப்புநிலை அடைவது மனிதன் மரணிக்கும் பாதை. இதை நித்ய பிரளயம் நித்திய சிருஷ்டி என்கிறது விஷ்ணு புராணம் .

இதை காகபுசுண்டர் சொல்கிறார் .
தூங்கினார் தெய்வபயம் கோனின் அச்சம்

துடர்பிரம்ம சர்பபயம் தொக்கி நோயால்

ஏங்கினார் குடற்பசியால் தாரித்திரத்தால்

எல்லாறும் மாண்டார்கள் துன்பம் மிஞ்சி

……

காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் 667
தூங்கி விழிப்பவர்கள் தெய்வபயம் , அரசின்பயம் விசபயம் அடைவார்கள் . முதுமைக்கும் நோய்க்கும் , பயம் கொள்வார்கள் . தரித்திரம் பெற்று பாசியால் ஏங்கினார் . தினமும் துன்பப்பட்டு மரணமாவார்கள் .
சாகாதன்மை மற்றும் கிழவன் பாலன் ஆதலும் முடியுமா ?

விழிப்பின் போது இழந்த சக்தி அளவு தினமும் மீட்டு பெறும் சக்திஅளவு சமமாக இருந்தால் மரணம் இல்லை. இழந்த சக்தியைவிட மீடடு பெறும் சக்தி அதிகம் இருந்தால் நரை திரை மூப்பு மாறி கிழவன் பாலனாகமுடியும் . இது மரணம் இல்லா சக்தி சமநிலை . உடல் உயிரை சக்தியை சமநிலையில் தக்கவைக்கும். இந்த சக்தி சமநிலையை இழக்காமல் தொடர்ந்து பெற வேண்டும் . இந்த தொழில் நுட்பமே காயசித்தி . இதில் கற்பம் உண்பதும் அஷ்டாங்க யோகம் என்ற வாசி யோகம் செய்வதும் பெரும் பங்கு வகிக்கிறது காய சித்தி அடைவது முக்தியில் ஒரு பகுதி…
நாம் சக்திசமநிலை பெறுவது எப்படி ? சாகாநிலை அடைவது எப்படி ?

நமது உடல்12 சூரியகலை பிரபஞ்ச சக்தியை வலது நாசி சுவாசத்தில் பெறுகிறது இது எதிர்மறை சக்தி . நமது இடது நாசி 16 சந்திரகலை சக்தியை உடலுக்கு கொடுக்கும் திறன் வாய்ந்தது .. இது நேர்மறை சக்தி .
சூரியகலை சக்தி 1.2 சந்திரனின் 1 6 கலை சக்தியில் இருந்து 1 2 கலையுடன் சேர்ந்து 24 கலை சூரியசந்திர சக்தி யாக மாறும் . இந்த

சூரியசந்திர சக்தி நமது உடலில் 48 கலை சகதி உருவாக்கும் . ஆக நமது உடல் சக்தி 48 கலையும் சூரியசந்திர 24 கலை சக்தியும் சேர்ந்து 72 கலை சக்தி உற்பத்தி ஆகிறது . நமது உடலின் 96 தத்துவங்களுக்கு 9 6 கலை சக்தி தேவை ..எனவே சக்தி குறை பாடு 9 6 -7 2 = 2 4 கலை .. இந்தசக்தி குறைபாடு தத்துவங்களை பலம் இழக்க செய்து தத்துவங்கலை சிதைகிறது . இதனால் உடல் அழிகிறது.
அஷ்டாங்க யோகத்தில் துரிய தியான நிலையில் வாசியானது தாரகலை என்ற அக்கினி கலை உருவாக்கும் இது சுழுமுனை நாடி என்ற சக்தி ஓட்டத்தை உருவாக்கும் . இந்த அக்னிகலை அல்லது தாரகலை நான்கு எதிர்மறை சக்தியை பிரபஞ்சத்தில் இருந்து பெறும் . இந்த நான்கு எதிர்மறை அக்னிகலையும் 1 2 எதிர்மறை சூரியகலை சக்தியும் சேர்ந்து 1 6 எதிர்மறை கலை சக்தி ஆகும் . இவை 16 நேர்மறை சந்திர கலை யுடன் சேர்ந்து 32 சூரியசந்திரஅக்கினி கலை யாக மாறும் . இவை உடலில் 64 கலை சக்தியை உருவாக்கும .
 ஆகமொத்தம் 3 2 + 64 =9 6 கலை சக்தி உடல் பெற்று தத்துவங்கள் உயர்சக்தி பெறும். உடல் அழியாமல் இருக்கும்

நமது உடல் சக்தியை தக்க வைக்கும் திறன் அதிகம் பெறும் . இதனால் முதுமை குறை.ந்து இளமை திரும்பும் .
மனிதனுக்கு இறைவன் கொடுத்த மாபெரும் வரம் துரிய நிலையும் துரியா அதீத நிலையும் . இந்த நிலைகளில் நாம விழிப்பு உணர்வில் இழந்த சக்தியை விட மிக அதிக சக்தியை தொடர்ந்து பெறுகிறோம் . ஆகையால் தத்துவங்கள் செயல்பட போதிய சக்தி கிடைக்கிறது.எனவே மரணம் இல்லாமல் வாழ முடியும் .
மேலும் அப்பூர்வ சக்திகள் அல்லது சித்திகள் பெறமுடியும் . எனவே சித்தர்கள் “ தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் எக்காலம் “ என பரிபாசையாய் பாடினார்கள் . தூங்காமல் தூங்கி என்ற துரிய மற்றும் துரியாதீத நிலைபெற்று அபரிமிதமான சக்தி பெற்று மரணம் அடையாதநிலை பெறுவதுடன் அபூர்வ சக்திகள் என்ற சித்திகள் பெறுவது எக்காலம் என்று சொன்னார்கள் .

கடவுள் மனிதன் –  முக்தி

***************************
( சாகாபாதை தோற்றங்கழும கண்களும் 25 தத்துவங்களும்)
(பகுதி6)

*********
thanks for Raja Krishna Moorthy sir….
 மரணமில்லா பெருவாழ்வு பாதை

சித்தர்களும் சிவயோகிகளும?் அஷ்டாங்க யோகபாதையில் ஜாக்கிரதா அவத்தையில் இருந்து பிரத்தியாகாரம் , தாரணை , தியானம் என்ற அங்கங்களுக்கு சென்று துரிய உணர்வு நிலை அடைகிறார்கள் . அதில் அளப்பரிய பிரபஞ்ச சக்தி பெறுகிறார்கள் . 
பின்பு விழிப்பு நிலைக்கு திரும்புகிறார்கள் ..இதனால் என்றும் இளமையுடம் மரணமில்லாமல் வாழ்கிறார்கள் சித்தர்கள் …
தூங்காமல் துரியநிலை பெரியோரானார் அண்டர்கள் .

காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் 663
தூங்கி விழித்து.வாழ்பவர, சிறியோர் மரண மாவார் .. அண்டர் என்ற சித்தர்கள் தூங்காம துரிய நிலை சென்று சக்தி பெற்று மரணமில்லா வாழ்வு பெற்று பெரியவர் ஆனார்கள் என்கிறார் காகபுசுண்டர்

இதுவே காய சித்தி யோக சித்தி .. இதுt சரியை , கிரியை யோகம் ஞானம என்ற ஞானவழி என்கிறார் சுப்பிரமணியர்.
பிழைப் பார்க்கு ஞானவழி துறந்திட்டேனே

துறந்தவழி அடையாமற் பார்பாயாகில்

துரியம் என்று வாசியிலே ஏறிபாரு

மறந்தாலே பரமோட்ச்சம் இல்லையப்பா

குறைந்தாக்கால் சரம் பிழைக்கும் குணங்கள் வேறாம்

குலைப்பிட்டு தலை புழுத்த நாய்போல் ஆவாய்

சுபரமன்யர் ஞானம்12 பாடல். 8 &9
மரணமடையாமல் இருப்பதற்கு மறைப்பு இல்லாமல் வழி சொல்கிறேன் . வாசி யோகம் செய்து, தியானத்தில் துரியம் என்ற உணர்வுநிலை அடை . வாசி யோகம் விடாமல் செய் . . இதை மறந்தால் மோட்சம் இல்லை . இதை விட்டுவிட்டால் கத்திக்கத்தி புழுத்த நாய் போல் மரணிப்பாய் .

இன்றைய அறிவியல் Electro Encephalo Gram . பயன்படுத்திய ஆய்வில் விழிப்புநிலையில் இருந்து beta அதீதவுணர்வு நிலை செல்லும் போது, காமா அலை வரிசை உருவாகிறது என்பதை உறுதி செய்கிறது . இந்த காமா அலை , ஆயுளை அதிகரிக்கிறது . பேரானந்தம் உருவாக்குகிறது . இதுவே சாகா பாதை .
இதுவரை காண்பதில் இணைந்துள்ள 25 தத்துவங்கள் பார்த்தோம் . இந்த தத்துவங்களை கொண்டு காண பயன்படும் கண்களை பார்ப்போம் .
காகபுசுண்டர் சொல்வதை பார்ப்போம் .

ஓய்ந்துபார் தனித்திருந்து உற்றுப்பாரு

ஊர்சுற்றுங் கண்ணோடு மனக்கண் சாரு

காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் 639
ஞானக்கண் நெற்றிக்கண் உச்சிக்கண்ணு

நயனக்கண் மேலேதான் யோகக்கண்ணு

ஊனக்கண் சதைக்கண்ணு பாடல் விழியின்கண்ணு .

சாகாபாதை பற்றி

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 648

. சொன்னதை கொண்டுமே விசாரித்தேன் யான்

துரியபத ஒளிக்கண்ணாம் ஞானக்கண்ணாம்

காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் 621
காகபுசுண்டர் நமக்குள் இருக்கும் பலவித கண்களை சொல்கிறார் .

கண் / சதைக்கண்/ ஊனக்கண் / விழி கண்

நினைவு நிலையில், நிஜத்தில் நம்முன் உருவங்கள்மற்றும் நிகழ்வுகள் தோன்றுவது . 
புரககண்களால் அல்லது விழிகளால் காண்பது. இவ்விதம் காண்பது ;நமது புரக்கண்னின், பார்க்கும் தன்மை , சூழ்நிலை, தூரத்தை சார்ந்து நிகழ்வது மற்றும் மூளையின் ஒருங்கிணைப்பு தன்மையை சார்ந்தது ..
மனக்கண் / நயனக்கண்

தனித்து இருந்து கண்களை மூடி உற்று பார்க்கும் போது காட்சிகள் தோன்றும் . இது மனக்கண் கண்களை மூடி நாம் ஏற்கெனவே பார்த்தவற்றை மீண்டும் ஞாபகம் செய்து பார்ப்பது . இது மனக்கண்ணால் ஸ்துலதேகத்தில் ஜாக்கிரத அவத்தையில் காண்பது .

. திராடக , சூரிய யோகம் .சந்திரயோகம், ஆகிய பயிற்சசிகள் செய்யும்போது கண்களை மூடி பாக்கும் போது தோன்றும் ஒளி மற்றும் உருவங்கள் மனக்கண்ணால் காணப்படுவது இவை சூக்குமதேகத்தில் ஜாக்கிரதா அவத்தையில் மனக்கண் நிலையில் காண்பது .

யோககண்;
. வாசி யோகத்தில் கண்களை மூடியபடி பிரத்தியாகாரம், தாரணை ஆகிய பயிற்சசிகள், செய்யும்போது நாம் காணும் காட்சிகள் சூட்ச்சம தேகத்தில் ஜாக்கிரதா அவத்தையில் யோககண் கொண்டு பார்க்க படுவது . இதில் தோன்றும் ஒளி வாலை இல்லை .
ஞானக்கண்/ ஒளிக்கண்

வாசி யோகத்தில் துரிய தியான நிலையில் காணும் ஒளி வாலை . இந்த வாலை ஒளியை காண பயன்படுவது ஞானக்கண். இந்த கண் கொண்டு தூரத்தில் இருப்பதையும் , நடந்தவற்றையும் நடக்க போவதையும் காண்பது இயலும் . இதை ஞான திருஷ்டி என்றும் சொல்லுவார்கள் , இந்த நிலையில் சித்தர்களை பார்க்கலாம் . பேசலாம்
நெற்றிக்கண்/ மூன்றாம் கண்

கூடாத நெற்றிக்கண் திறந்ததனால்

குரு முனியே யாகலையா நாரதாதி

காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் 7௮2
சித்தர்கள் , ரிஷிகள் முனிகளின் புருவமத்தியில் மறைந்திருக்கும் கண் தான் நெற்றிக்கண். என்ற மூன்றாம் கண். மூன்றாம் கண் திறக்கபட்டால் குருமுனி என்ற நிலை கிடைக்கும் அவவிதம் குரு முனி ஆனவர் அகத்தியர் .
 மூன்றாம்கண் சித்தசக்தியை வெளிபடுத்த பயன்படும் . சிவன் நெற்றிக்கண் திறந்து மன்மதனை எரித்தார்.. கொக்கை கொங்கணர் எரித்தார் . இதன் பயன்பாடு அழிப்பதற்கு உள்ளது ..இந்தகண் சுழிமுனையில் , சூட்ச்சம தேகத்தில் துரிய நிலையில் செயல்படும் .
உச்சிக்கண்

இது சகஸ்ரார சக்கரத்தில் இயங்குவது .. சூட்சம தேகத்தில் துரிய நிலையில் இயங்குவது . இதனால் முப்பாழ் என்னும் பாழ்வெளியை தரிசிக்க முடியும் .இதை மௌன யோகம் என்பார்கள் . வெளிப்பாழில் பரவெளியில் இருக்கும் உண்மணித்தாய் என்ற பிரபன்ச்ச வாலை கண்டு பிரபன்ச்சத்தில் இறைவனோடு ஒன்றுதல் . இதை பரமுக்தி என்பார்கள் .
இந்த கண்கள் வாசியோக தியானத்தில் உருவாகும் .

இன்றைய அறிவியல் ஆய்வில் தியானம் .

10௦ ஆண்டுகள் முதல் 4௦0 ஆண்டுகள் வரை தியானம் செய்து ,தியானத்தில் முதிர்ந்தவர்களையும் ஆரம்ப நிலையில் தியானம் செய்பவர்களையும் வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .. 
தியானத்தின் போது மூளையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி Electro Encephala Gram கருவியால் ஆய்வு செய்யப்பட்டது .இந்த ஆய்வு தியானத்தின் போது மூளையில் ஐந்துவகை அலை வரிசைகள் உருவாவதாக சொல்கிறது .. அவைகள் உருவாககும் உணர்வு நிலைகளை சொல்கிறது . அவைகள்

b Deltawave :upto 3 Herdz….. Deep sleep state

Thetawave :4 to to 7HZ Transition between deep sleep and dream state

Alpha wave:, 8 to 15 Dream state when the eye is closed and not in deep sleep

Beta wave: 16 to 31 consciousness state

Gamma wav 32 to 100 HZ at the higher stage of meditation . , Stochastic resonance .
டெல்டா அலைவரிசை : ஆழ்ந்த தூக்கத்தில் உணர்வு அற்ற நிலையில் உருவாகிறது . இந்தஅலைவரிசை 3 ஹெர்ட்ஸ?் வரை இருக்கும் இதை சித்தர்கள் சுழுத்தி. என்றனர் Delta wave upto? 3 Herdz….. Deep sleep state
தீடா அலைவரிசை . இது 4 முதல் 7ஹெர்ட்ஸ் வரை இருக்கும் இது கனவு நிலையில் இருந்து ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு செல்லும் . Thetawave 4 to to 7HZ Transition between deep sleep and dream state .
ஆல்பா அலை வரிசை :கண்களை மூடியநிலையில் உருவாவது . இந்த நிலையில் 8 முதல் 15 ஹெர்ட்ஸ் உருவாகும் . 15 ஹெர்ட்ஸ் உயர் அலைவரிசையில் கனவு தோன்றும் Alpha wave, 8 to 15 Dream state when the eye is closed and not in deep sleep. இதை சொப்பனா அவஸ்தை என்றாற்கள் சித்தர்கள் .
பீட்டர் அலை வரிசை : இந்த அலைவரிசை 16 முதல் 32 ஹெர்ட்ஸ் அதிர்வில் உருவாகும் . இது, கண் திறந்த நிலையில் சுய உணர்வு நிலையில் உருவாகும் . இதை விழிப்பு அல்லாது ஜாக்கிரதா அவஸ்தா என்றார்கள் சித்தர்கள் .
சாதாரண மனிதர்கள் பீட்டா அலை வரிசை என்ற சுய உணர்வு நிலையில் இருந்து ஆல்பா அலைவரிசையில் கனவுநிலைக்கு சென்று தீட்டா அலைவரிசையில் தூக்கநிலை அடைகின்றனர் பின்பு டெல்டா அலைக்கு சென்று ஆழ்ந்த தூக்கம் அடைந்து சக்தி பெறுகின்றனர் . சக்திபெற்றபின் விழிப்பு அடைகிறார்கள் . இது மரணிக்கும் பாதை . .
ஆனால் விழிப்பு நிலையில் இருந்து அதாவது பீட்டா நிலை யில் இருந்து காமாநிலைஎன்ற் துரிய நிலை சென்று அளப்பரிய சக்தியும் , சித்தியும் பெறுவது மரணமில்லா பாதை . அப்பொழுது பிரத்தியாகாரம தாரணை தியானம் ஆகிய படித்தரநிலைகளை கடக்கவேண்டும் என்று சித்தர்களின் வாசி யோகம் சொல்கிறது இது ராஜ பாட்டை என்ற ராஜ யோகம் .என்ற அஷ்டாங்க யோகம் .எளிதாக , மனம் குழப்பம் அடையாமல் துரியம் என்ற காமா நிலை அடையமுடியும் மேலும் பாதுகாப்பானது .
வாசி யோகமும் பிற தியானமுறைகளும்.

. ஆராய்ச்சி முடிவுகளின்படி , புத்த துறவிகளில் ஆரம்ப நிலை தியானம் செய்தவர்களுக்கு காமா அலை வரிசை உருவாகவில்லை காரணம் அவர்கள் தூக்கநிலை சென்றார்கள் அல்லாது சுய உணர்வு நிலையை கடக்க முடியவில்லை . . ஆனால் 1௦௦0 ஆண்டு தியானம் முதல் 4 0 ஆண்டு தியானம் செய்தவர்கள்தான் காமா அலை உருவாக்கினார்கள் . .
பிற தியானமுறைகள் துரியம் அல்லது காமா நிலை அடைய பிரத்தியாகாரம் தாரணை போன்றபடித்தரங்களை அல்லது படிகளை சொல்லாமல் நேரடியாக துரிய நிலை செல்ல சொல்வதால் மனகுழப்பம் ஏற்படும் . இது தான் ஓஷோ சொல்லும் தியானம் . மேலும் நேரடியாக தியானம் செய்வதில் மனம் குவியாது .,துரிய நிலை செல்லாமல் தூக்க நிலை செல்லும் அல்லது குழப்பம் அடையும் தியானம் கை கூடாது
யோகா என்றாலே வாசி யோகம் என்ற அஷ்டாங்க யோகம் என்கிறது

விஷ்ணுபுராணம் ஆறாம் அத்தியாயம் வாசி யோகத்தின் எட்டு அங்கங்களை விளக்குகிறது . 

ஞானத்தின் மூலம் யோகிகள் பரமாத்மாவவுடன் ஒன்றுவது பற்றி சொல்லும் விததையே யோகம் … இத்தகைய யோகிகளுக்கு பிறப்போ இறப்போ இல்லை . இது ஆத்யந்திக பிரளயம் அல்லது மோட்சம். இந்த முயற்சியை மேற்கொள்பவன் மும்முசு . என்ற யோகி . யோகத்தை மேற்கொள்பவன் யுஞ்ஜானன் மற்றும் யோக யுக .. சமாதி கை கூடினால் யுக்தன்

மன திரிபு அல்லது பைத்தியம் .. .
ஒருமனிதனை மிகுந்த மன அழுத்தம் தாக்கும் போது. அல்லது தூங்கவிடாமல் இடையூறுகள் அல்லது சித்ரவதை செய்யும் போது ஆழ்தூகம் பெறமுடியாமல் உடல் சக்தி பெறமுடியாமல் போகிறது. . மேலும் ஒரு அலை வரிசை நிலையில் அல்லது அவத்தை நிலையில் இருந்து வேறு அவத்தை நிலைக்கு முறையாக செல்லமுடிவது இல்லை . ஒரு அவத்தைநிலை மற்றொன்றால் நெருக்கப்பட்டு இரண்டும் கலந்து மன குழப்பத்தை தருகிறது . அப்பொழுது ஏற்படும் தோற்றங்கள் மனத்திரிபு அல்லது பைத்திய நிலையில் ஏற்படுவது . உதாரணமாக யாரோ ஒருவர் காதில் சொல்வது போன்ற தோற்றம் .
. தியானத்தின் போது மனம் ஒரு உணர்வு நிலை அல்லது அவத்தை நிலையில் இருந்து அடுத்த மன உணர்வுநிலைக்கு சென்று மீண்டும் சுயஉணர்வு நிலைக்கு திரும்பும் . அப்பொழுது உருவாகும் தோற்றங்கள் இயல்பான தோற்றங்கள் . இது அறிவியல் படி சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை .

ஆக ஓஷோ பைத்தியங்கள் காணும் தோற்றங்களையும் காமாநிலை அல்லது துரியநிலை தியான தோற்றங்களையும் பிரித்து அறியமுடியாத அறியாமையால் சொன்ன கருத்துகளே மேலே சொன்னவை .
ஸ்டோகாஸ்டிக் ரேசொனான்ஸ் Stochastic resonance மற்றும் சாகா பாதை

தியானத்தில் ஏற்படும் நிலைகள் மற்றும் அலை வரிசைகளை சித்தர்கள் அவத்தைகள் என்றனர் . இன்றைய அறிவியல் சோதனைகளின்படி பெறப்பட்ட அலை வரிசைகளிள் காமா அலை வரிசை மனிதனின் ஆயுளை அதிகரிக்கிறது . அறிவுநிலையை அதிகரித்து முடிவெடுக்கும் திறனை உயர்த்துகிறது . மன அமைதியும் ஆனந்தமும் தருகிறது . அளப்பரிய சக்தி தருகிறது . இந்த காமாநிலையில் ஸ்டோகாஸ்டிக் ரேசொனான்ஸ் என்னும் நிகழ்வு ஏற்படுகிறது என்கிறது ஆய்வுகள் . ஆனால் அது எப்படி ஏற்படுகிறது என்பதை அவர்களால் அறிய முடியவில்லை .
ரேசொனான்ஸ் என்பது ஒரு அலைவரிசை மற்றொறு அலை வரிசையோடு இணையும்போது அதன் அலை உயரம் வியக்கத்தக்க வகையில் உயரும் . அப்பொழுது அளப்பரிய சக்திவெளிப்படும் .. 
சுனாமியின் போது அலை உயரம் அதிகரிக்க செய்வது ரேசொனான்ஸ். ஸ்டோகாஸ்டிக் என்பது கால ஒழுங்கற்ற நிகழ்வு .

எனவே ஸ்டோகாஸ்டிக் ரேசொனான்ஸ் காமாநிலையில் கால ஒழுங்கற்ற அளப்பரிய சக்தி கிடைகிறது . இந்த புரியாதபுதிரை நம் சித்தர்கள் தெளிவாக சொன்னார்கள் . இடகலை பிங்கலை தாரைகலை ஆகிய அதிர்வலைகளை சுழிமுனையில் இணைத்தால் வாலை பிறக்கும் . அப்பொழுது கோடி சூரிய பிரகாச ஒளி தோன்றும் . இதுவே வாலை இதுவே அளப்பரிய சக்தி சமநிலை . இந்த சக்தியால் உருவாவது அமிர்தம் . இந்த அமிர்தம் சாகா நிலை தறும் … வாலை உருவாக்குவதை படிப்படியாக வாசி யோகத்தில் சொல்லி உள்ளார்கள் சித்தர்கள்., ஸ்டோகாஸ்டிக் என்ற கால ஒழுங்கு அற்ற நிலையை தவிர்த்து , கால ஒழுங்கான சமநிலையான அலைகளை இணைத்து ரேசொனான்ஸ் உருவாக்கி அளப்பரிய சக்தியும் சித்தியும் பெற்றனர் சித்தர்கள் . நீங்களும,் பெறமுடியும் இந்த அறிவியலை இன்றைய அறிவியலார் மற்றும் பிற தியான முறைகள் தொடமுடியவில்லை இது

நமது சித்தர்கள் நமக்கு தந்த அறிவியல் சொத்து … . இதுவே சாகாபாதை

Leave a comment